அந்தமான் நிகோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

அந்தமான் நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 151 கி.மீ. தூரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ பொருட் சேதமோ ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது போல் கடந்த மாதம் 9ஆம் தேதியும் இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. இதன் எதிரொலியாக அந்தமானில் 5.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து பெர்கா என்ற இடத்திற்கு 123 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவானது.