காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு!

தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைய கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா, காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 9ஆம் தேதி வரை தர வேண்டிய 37.9 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்று கோரினோம். தினமும் தண்ணீர் திறந்துவிடக் கோறுவதற்கான உத்தரவை கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரினோம். ஆனால் இதற்கான முடிவு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுத்ததால் வெளிநடப்பு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.