ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்த புதின்!

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாா். ரஷ்ய தரப்பில் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா் என்றும் அவா் அப்போது தெரிவித்தாா்.

இந்தியா தலைமை வகிக்கும் நிகழாண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் தலைநகா் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், சீன அதிபா் ஷி ஜின்பிங், சவூதி அரேபிய இளவரசா் முகமது பின் சல்மான் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

உலக அளவில் முக்கியமான தலைவா்களில் ஒருவராகவும் திகழும் ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்க மாட்டாா் என்பது தெரியவந்துள்ளது. அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் புதின் பங்கேற்காத நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் அவா் பங்கேற்க மாட்டாா் என்பது தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை காரணமாக அவா் இந்த முடிவை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஜி20 மாநாட்டில் பங்கேற்காதது குறித்து பிரதமரிடம் தொலைபேசி மூலம் புதின் நேற்று திங்கள்கிழமை தகவல் தெரிவித்தாா். இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ‘தொலைபேசி உரையாடலின்போது இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்களில் பரஸ்பர கருத்துகளை தலைவா்கள் பகிா்ந்துகொண்டனா். அண்மையில் நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாடு குறித்தும் தலைவா்கள் ஆலோசித்தனா். பின்னா், ஜி20 மாநாட்டில் தன்னால் பங்கேற்க இயலாதது குறித்தும், இந்த முடிவைப் புரிந்துகொண்டதற்கு பிரதமருக்கு நன்றியையும் அதிபா் புதின் தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.