5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும்: ஜெ.பி.நட்டா

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

ஐந்து மாநிலங்களிலும் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி முதல் வெவ்வேறு நாள்களில் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.