‘லியோ’ படம் ரிலீஸ் ஆகலைனா விஜய் ரசிகர்கள் செத்துருவாங்களா: சவுக்கு சங்கர்

நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட டிரெய்லர் வெளியிடப்பட்ட ரோகிணி திரையரங்கம் சூறையாடப்பட்டது தொடர்பாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், லியோ திரைப்படம் சொன்ன தேதிக்கு வெளியாகவில்லை என்றால் விஜய் ரசிகர்கள் செத்துருவாங்காளா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மெகா ஹிட்டுகளை லோகேஷ் கனகராஜ் கொடுத்ததால், இந்த திரைப்படத்திற்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான், கடந்த 5-ம் தேதி இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில், டிரெய்லரை சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்டிய சென்னை ரோகிணி திரையரங்கை விஜய் ரசிகர்கள் சூறையாடினர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கர் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரித்திருக்கிறது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், என்ன சொல்லி இருக்கணும். அனுமதி உண்டு; அனுமதி கிடையாதுனு ஏதாவது ஒன்றை சொல்லி இருக்கணும். ஆனால், நீதிபதிகள் என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா? “காவல்துறை ஒழுங்காவே வேலைய செய்றது இல்ல.. ஏ.ஆர். ரகுமான் நிகழ்ச்சியில் எவ்வளவு பிரச்சினை நடந்துச்சு பாருங்க; இப்போ லியோ டிரெய்லர் வெளியீட்டுல ரோகிணி தியேட்டரில் என்ன நடந்திச்சு பாருங்கனு” சொல்லிருக்காங்க.

நான் அந்த நீதிபதியை பார்த்து கேக்குறேன். தியேட்டருக்குள்ள இப்படி நடந்ததுக்கு போலீஸ் என்னங்க பண்ணுவாங்க? பொது இடத்துல நிகழ்ச்சி நடத்துனா காவல்துறையிடம் அனுமதி வாங்கணும். தியேட்டருக்குள் ஒரு நிகழ்ச்சியை நடத்திட்டு சேர்ரு உடைஞ்சதுக்கும், டேபிள் உடைஞ்சதுக்கும் எப்படி போலீஸ் மேல நீதிபதி பழிபோடுவாரு? போலீஸுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லுங்க?

இதை எல்லாத்தையும் விடுங்க.. ரோகிணி தியேட்டரில் நடந்ததை பார்க்கும் போது, எனக்கு உள்ளபடியே நடிகர் விஜய்யை நினைத்து வருத்தமாகவும், பரிதாபமாகவும் இருந்தது. இப்படி ஒரு தியேட்டரை திறந்து விட்டால், அங்க போய் மொத்த சீட்டையும் உடைச்சு போட்டுட்டு வர்றாங்களே.. இந்த மாதிரி பசங்கள வெச்சிட்டா தமிழ்நாட்டுக்கு சி.எம். ஆயிடலாம்னு விஜய் ஆசைப்படுறாரு? ரோகிணி தியேட்டர்ல் மட்டும் இல்ல.. மத்த இடங்களேயும் அவங்க பண்ணத பாத்தீங்களா? இந்த பசங்கள வெச்சி விஜய் சூப்பரா சி.எம். ஆயிடுவாரு.

​இதுல வேற சிலர் சொல்றாங்க.. லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் ஆனதால விஜய் ரசிகர்கள் கோபத்துல இருந்தாங்களாமா.. அந்த விரக்தியில இப்படி பண்ணிட்டாங்களாமா.. நான் கேக்குறேன். லியோ படம் 19-ம் தேதி ரிலீஸ் ஆகுது. ஒருவேளை, அந்த நாள்ல லியோ படம் ரிலீஸ் ஆகலைனா, விஜய் ரசிகர்கள் எல்லாம் செத்து போயிருவாங்களா? அப்புறம் என்ன.. இசை வெளியீட்டு விழா நடக்கலைனா அவங்க என்ன ஆயிட்டாங்களாம்? சோறு திங்கலையா யாரும்? என்ன குடி முழுகி போயிருச்சா? இன்னொன்னு சொல்லட்டுமா.. இப்படி நடப்பதை எல்லாம் தயாரிப்பாளர் தரப்பும், நடிகர் தரப்பும் என்ஜாய் பண்ணுது தெரியுமா உங்களுக்கு? எல்லாமே வியாபாரம்ங்க. விஜய் இதை எல்லாம் புரிஞ்சுக்குவாரா இல்லையா என்பது பற்றி எல்லாம் கவலை கிடையாது. தேர்தலுக்கு அவரு வந்து தானே ஆவணும். அப்போ பாத்துக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.