4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.இன்று நான்கு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் பெருமழை பெய்துவரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் இன்று டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதனிடையே நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.