பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவலையடையக் கூடாது: அன்புமணி

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.53% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக் கூடாது. அடுத்த மாதமே துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து உயர்கல்வி பயணத்தைத் தொடங்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.