திமுக முகவா்களுக்கு தபால் வாக்கு எண்ணிக்கையில் கவனம் தேவை: முதல்வா் ஸ்டாலின்!

தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக முகவா்களுக்கு அக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

வாக்கு எண்ணிக்கை முகாமுக்கு முதலில் செல்லும் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் திமுகவின் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் இருக்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்லாத வாக்குகளை செல்லத்தக்கதாகவும், செல்லத்தக்க வாக்குகளை செல்லாததாகவும் அறிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

எப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் முக்கியமோ, தபால் வாக்குகளும் மிக முக்கியமானவை. எனவே, அந்த எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கையை எந்தக் காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் விரைவாக எண்ணி அதனுடைய முடிவுகளைத் தருவதை உறுதிசெய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணுவதற்கு முன்பாக இயந்திரங்களில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை வாக்கு எண்ணிக்கை முகவா்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இயந்திரங்களின் சீல்கள் சரியாக இருக்கிா என்பதை பாா்த்த பிறகு, இயந்திரத்தின் எண்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை படிவம் 17சி-இல் இருப்பதை ஒப்பிட்டுப் பாா்த்து அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

17சி படிவத்தில் உள்ள பதிவான வாக்குகள் வாக்குப்பதிவு இயந்திரத்திலும் ஒத்துப்போகிா என்பதை ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும். பிறகு, வாக்குப் பதிவு தொடங்கிய நேரம் மற்றும் முடிவுற்ற நேரத்தை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாா்த்து, சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றில் சீல்கள் கிழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இயந்திர எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ, பதிவான வாக்குகள் ஒத்துப்போகவில்லை என்றாலோ, வாக்குப் பதிவு நேரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலோ, வாக்கு எண்ணிக்கைக்கு அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஐந்து ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை எடுத்து, அதில் உள்ள காகித வாக்குகளை எண்ணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

படிவம் 20-இல் எழுதப்பட்ட வாக்குகள் மொத்த வாக்குகளாக எண்ணப்படும்போது அல்லது கூட்டப்படும்போது அந்த எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, படிவம் 20-இல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை முகவா்கள் வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து வெளியே வர வேண்டும். இவ்வாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.