விருதுநகரில் நீண்ட இழுபறிக்கு பின் விஜய பிரபாகரன் தோல்வி!

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணபட்ட நிலையில் விருதுநகர் தொகுதியில் காலையில் இருந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் சார்பாக போட்டியிட்ட விஜய பிரபாகரனும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட மாணிக்கம் தாகூரும் மாறி மாறி முன்னிலைப் வகித்து வந்த நிலையில் இறுதியாக மாணிக்க தாகூர் வெற்றி பெற்றிருக்கிறார்.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நீண்ட இளுபறிக்குப் பிறகு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். காலையில் எண்ணிக்கை தொடங்கிய போது தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு நிலவரம் மாறி இருந்தது. இந்த நிலையில் இறுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் தோல்வி அடைந்திருக்கிறார். 40 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விருதுநகர் தொகுதியில் தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் மாணிக்கம் தாகூரும் இரண்டாவது இடத்தில் விஜய பிரபாகரனும் இருக்கும் நிலையில் மூன்றாவது இடத்தில் ராதிகா சரத்குமார் 164149 வாக்குகளையும், நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கௌசிக் 76122 வாக்குகள் பெற்று இருக்கிறார்கள்.