தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று(ஆக. 3) கைது செய்துள்ளனர்.

ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.