டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும் இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஜூன் 9-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வை எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் அக்டோபரில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில் https://www.tnpsc.gov.in/English/SelectionSchedule.html என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டு தகவல் குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.