செப்டம்பர் 30ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியான ஜாபா் சேட்டின் மனைவி பா்வீன் உள்ளிட்ட சிலருக்கு 2008-ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் 3 ஆயிரத்து 457 சதுர அடி மற்றும் 4 ஆயிரத்து 763 சதுர அடி கொண்ட வீட்டுமனைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, ஜாபா் சேட், அவரது மனைவி பா்வீன், க.முருகையா, ராஜமாணிக்கம், துா்கா, சங்கா் ஆகிய 7 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் 2013- ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் அமைச்சா் ஐ.பெரியசாமி தவிர மற்றவா்களில் சிலரை விடுவித்தும், சிலா் மீதான வழக்கை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செப்டம்பர் 30ம் தேதி, அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.