ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியிடம் சசிகலா பேச வேண்டும்: புகழேந்தி!

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை அழைத்து சசிகலா பேச வேண்டும் என்று பெங்களூரு புகழேந்தி கூறினார்.

அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

எக்மோர் ரயில் நிலையத்துக்கு பெரியார் ரயில் நிலையம் எனபெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

சசிகலா அவ்வப்போது வெளியில் வந்து, அதிமுகவைச் சேர்த்து வைக்கிறேன் என்று கூறிவிட்டு, வீட்டுக்குள் சென்று விடுகிறார். எதிர்கால அரசியலைக் கருத்தில்கொண்டு, அதிமுக தலைவர்கள் ஒன்றுசேர வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை அழைத்து சசிகலா பேச வேண்டும். அதிமுகவில் பல்வேறு பதவிகளை அனுபவிப்பவர் கே.பி.முனுசாமி. அவருக்கு எது அனுகூலமோ, அவரை எது வாழவைக்கிறதோ, எங்கு அவருக்கு வரவேற்பு இருக்கிறதோ அங்கு சேர்ந்து கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.