கொள்கையை மாற்றிக் கொண்டார் திருமாவளவன்: எச்.ராஜா!

அடங்​கமறு, அத்து​மீறு என்பது விடுதலை சிறுத்​தைகள் கட்சி​யில் தற்போது இல்லை என்று எச்​.ராஜா கூறினார்.

பாஜக மூத்த தலைவர் எச்​.ராஜா, தாராசுரத்​தில் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:-

அடங்​கமறு, அத்து​மீறு என்பது விடுதலை சிறுத்​தைகள் கட்சி​யில் தற்போது இல்லை. அண்மைக்​காலமாக முதல்வர் ஸ்டா​லின் முன்பு அடங்​கிப் போ, குனிந்து போ, கூனிப் போ என்ற கொள்​கைக்கு அந்தக் கட்சித் தலைவர் திரு​மாவளவன் மாறி விட்​டார். அந்த கொள்​கையை ஆதவ் அர்ஜுனா ஏற்க மறுத்​தால், அவரை திருமாவளவன் கட்சி​யில் இருந்து நீக்கி​யுள்​ளார்.

மழை பாதிப்பு குறித்து அரசு கவலைப்​படாமல் இருந்​தால், 2026 தேர்​தலில் மக்கள் திமுக அரசை நீக்கு​வார்​கள். தமிழகத்​தில் மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழு​வினர் ஆய்வு மேற்​கொண்​டுள்​ளனர். பாதிப்பு குறித்த அறிக்கையை அளித்த பிறகு, மத்திய அரசு நிவாரணத்​தொகையை வழங்​கும். சூரியனார்​கோ​யில் விவகாரத்தில் பல பிரச்​சினை​கள் உள்ளன. இவ்​வாறு அவர் கூறினார்​.