வெளிநாட்டு சதி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது: இம்ரான் கான்!

வெளிநாட்டு சதி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.

சமூக வலைதளமான ட்விட்டரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சுதந்திர நாடானது. ஆனால் தற்போது, வெளிநாட்டு சதி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று மீண்டும் சுதந்திரப் போராட்டம் தொடங்குகிறது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை எப்போதும் பாதுகாப்பது நாட்டு மக்களே. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.