இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம்: யூஜிசி

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகிய அமைப்புகள் எச்சரித்துள்ளன. பாகிஸ்தானில் உயர்கல்வி முடித்துவிட்டு பெறும் பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இரு அமைப்புகள் கூறியதாவது:-

இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் மேற்படிப்பு பயின்றால் அவர்களது பட்டம் இந்தியாவில் செல்லாது. அவர்கள் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவும் முடியாது. இருப்பினும், பாகிஸ்தானில் உயர்கல்வி பயின்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் சான்றிதழ் அங்கீகரிக்கப்படும். அவர்களுக்கு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வாங்கிய பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் படிப்பதற்கு எதிராக இந்திய மாணவர்களை யூஜிசி கடந்த மாதம் எச்சரித்த நிலையில், தற்போது பாகிஸ்தானிலும் படிக்கக் கூடாது என யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.