மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள்: ராகுல் காந்தி

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கறி பற்றாக்குறைக்கும், மின்வெட்டு பிரச்சனைகளுக்கு யாரை குறைக்கூற போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கமாக தனது தோல்விகளுக்கு பிறரை குறைக்கூறி வரும் பிரதமர் மோடி, இந்த பிரச்சனைக்கு நேருவை குறைக்கூறுவீர்களா, மாநில அரசை குறைக்கூறுவீர்களா அல்லது மக்களை குறைக்கூறுவீர்களா என்று கேட்டுள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி வாக்குறுதி அளிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்ட அவர்,

2015-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும். மக்கள் மின்வெட்டு, நிலக்கரி பற்றாக்குறை போன்ற வார்த்தைகளை செய்தி தலைப்புகளில் பார்க்கவே மாட்டார்கள் என கூறியிருக்கிறார். ஆனால் நடந்தது என்னவே வேறு ஒன்றாக இருக்கிறது. பிரதமரின் வாக்குறுதிகளும் நோக்கமும் எப்போதும் துண்டிக்கப்பட்டே இருக்கிறது என கூறியுள்ளார்.

இத்துடன் தொழிலதிபர் ஒருவர் மின்வெட்டு பிரச்சனையால் இரவில் தூங்க முடியவில்லை என புலம்பும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மின் தட்டுப்பாட்டுக்கு 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என சொன்னாலும் சொல்வார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவீட் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என கூறுவதை பா.ஜ.க. வழக்கமாகக் கொண்டுள்ளது. மின் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என ஆரம்பித்து தற்போதுள்ள மின்சாரம், ரெயில்வே, நிலக்கரி துறைகளின் திறமையின்மையை விமர்சித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியையும் சிந்திக்கும் திறனற்றவர் எனவும் விமர்சித்துள்ளார்.