அரசியல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/politics/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Fri, 07 Jul 2023 06:02:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 அரசியல் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/politics/ 32 32 201197430 ராகுல் காந்தியின் மேல்முறையீடு தள்ளுபடி…2 ஆண்டு சிறை தண்டனை உறுதி https://koodal.com/news/2023/07/07/rahul-gandhis-appeal-dismissed/ Fri, 07 Jul 2023 06:02:15 +0000 https://koodal.com/?p=32980 ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. மோடி என்ற பெயர் குறித்து விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிதைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்,…

The post ராகுல் காந்தியின் மேல்முறையீடு தள்ளுபடி…2 ஆண்டு சிறை தண்டனை உறுதி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

மோடி என்ற பெயர் குறித்து விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிதைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

2019-இல் கா்நாடக பிரசாரத்தில் பேசிய ராகுல், ‘எப்படி அனைத்து கொள்ளையா்களும் மோடி என்ற பொதுவான துணைப்பெயரைக் கொண்டுள்ளனா்?’ என்றாா்.

மோடி சமூகத்தினரை ராகுல் இழிவுபடுத்தியதாக குஜராத்தின் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி தொடுத்த வழக்கில், சூரத் விசாரணை நீதிமன்றம் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி ராகுலுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ராகுலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

தண்டனைக்கு தடைக் கோரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்ய மனுவை கடந்த மே மாதம் விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சக், தண்டனைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டு, கோடை விடுமுறைக்குப் பிறகு உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ராகுல் மனு மீது தீா்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கின் வழக்கு விசாரணைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கிரிமினல் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தொடுத்த மேல்முறையீடு மனுவை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்துள்ள நீதிபதி ஹேமந்த் பிரச்சக், 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post ராகுல் காந்தியின் மேல்முறையீடு தள்ளுபடி…2 ஆண்டு சிறை தண்டனை உறுதி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
32980
வெற்றிக்கான மூன்று காரணிகள் – மோடி https://koodal.com/news/2023/03/03/three-factors-of-success/ Fri, 03 Mar 2023 09:11:19 +0000 https://koodal.com/?p=24412 திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு, பாஜகவின் மூன்று காரணிகள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைதொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா…

The post வெற்றிக்கான மூன்று காரணிகள் – மோடி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு, பாஜகவின் மூன்று காரணிகள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைதொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த மூன்று மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

அந்தவகையில் திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இம்மூன்று மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தோல்வியை தழுவியுள்ளன. இந்தநிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, வெற்றிக்காக உழைத்த பாஜகவினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மேலும் வடகிழக்கு சகோதர சகோதரிகளை மதிக்க” தங்கள் தொலைபேசிகளில் ஒளிரும் விளக்குகளை இயக்குமாறு பாஜக ஊழியர்களை வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து பாஜக தொண்டர்கள் தங்கள் செல்போனில் டார்ச்சை ஆன் செய்து தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

பாஜக தலைமையகத்தில் பிரதமர் உரையாற்றும்போது, ‘‘ வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி தொலைவே வடகிழக்கு மாநிலங்கள் இருந்தாலும், இதயத்திற்கு அருகில் தான் இருக்கிறது.

கடந்த ஆண்டுகளில், பாஜக இதுபோன்ற பல சந்தர்ப்பங்களைக் கண்டுள்ளது. இன்று அதுபோன்ற மற்றொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநில மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.

இன்றைய தேர்தல் முடிவுகள் நாட்டுக்கும் உலகத்துக்கும் ஒரு செய்தி. இந்தியாவில் மக்கள் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நம்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கில் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகும், ஆனால் அதிகம் விவாதிக்கப்படாது.

தேர்தல் வன்முறை மற்றும் முற்றுகை குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. ஆனால் இம்முறை வடகிழக்கில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டோம். புதிய சிந்தனையின் பிரதிபலிப்பாக இருக்கும் வடகிழக்கை நாங்கள் காண்கிறோம்.

பாஜகவின் வெற்றிக்கான காரணத்தை பல அரசியல் ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். நமது நலம் விரும்பிகள் சிலர் அதற்கான காரணத்தை அறிய விரும்புகிறார்கள். காரணம் ‘திரிவேணி’ அதாவது மூன்று முக்கிய காரணிகள். முதல் காரணம் பாஜக அரசாங்கத்தின் வேலை, இரண்டாவது பாஜகவின் வேலை பாணி, கடைசியாக பாஜகவின் காரியகர்த்தாக்கள்’’ என பிரதமர் தெரிவித்தார்.

The post வெற்றிக்கான மூன்று காரணிகள் – மோடி appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
24412
மம்தா தனித்து போட்டி – பாஜக சர்ப்ரைஸ்-காங்கிரஸ் ஷாக் https://koodal.com/news/2023/03/03/mamtha-banerji-announced/ Fri, 03 Mar 2023 08:58:00 +0000 https://koodal.com/?p=24409 பாஜக சர்ப்ரைஸ், காங்கிரஸுக்கு கல்தா 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும், பாஜக கூட்டணி தொடர்ந்து இரு…

The post மம்தா தனித்து போட்டி – பாஜக சர்ப்ரைஸ்-காங்கிரஸ் ஷாக் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பாஜக சர்ப்ரைஸ், காங்கிரஸுக்கு கல்தா

2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும், பாஜக கூட்டணி தொடர்ந்து இரு முறை ஆட்சியமைத்துள்ள நிலையில் மக்கள் மூன்றாவது வாய்ப்பு வழங்குவார்களா, பாஜக அணியை வீழ்த்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்குமா என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்கு முக்கிய காரணம் எதிர்கட்சிகள் ஓரணியில் திரளாததே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். மூன்று அணிகள் போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி 2014ஐவிட சிறப்பான வெற்றியை பாஜக பெற்றது.

2019இல் நடந்த தவறை இனி நடக்க கூடாது, உள் முரண்களை மறந்து பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்தித்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். இதை ஏற்பதில் பிற கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. அவர்களுக்கு பலவீனமடைந்த காங்கிரஸை தூக்கிப் பிடிக்க வேண்டாம் என்ற எண்ணம் இருக்கிறது.

நாட்டை அதிக முறை ஆண்ட கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சி தனது தவறுகளை சரி செய்து கொள்ளாததன் விளைவாக பல மாநிலங்களில் பின்னடைவை சந்தித்தது. பிராந்திய நலனுக்கு முன்னுரிமை கொடுக்காததால் அக்கட்சியே பல மாநிலங்களில் உடைந்து புதிய பிராந்திய கட்சிகள் உருவாகின. வெவ்வேறு காலகட்டங்களில் தொடங்கப்பட்ட அத்தகைய கட்சிகள் சிறியதும் பெரியதுமாக 60க்கும் மேல் இருக்கும். அப்படி உருவான கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ், மம்தா பானர்ஜி தொடங்கிய அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், புதுச்சேரியில் என்.ரங்கசாமி தொடங்கிய என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறு காங்கிரஸிலிருந்து உருவான கட்சிகள் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதில் தயக்கம் காட்டுகின்றன. இவர்களில் பிற கட்சிகள் தங்கள் மாநிலங்களில் வலிமையாக இருந்தால் போதும் என்று நினைக்கும் போது மம்தா பானர்ஜியோ தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் இடத்தை பிடிக்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.

இதனாலே மேற்கு வங்கம் மட்டும் அல்லாமல் அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்சி தொடங்கியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் இந்த மாநிலங்கள் சிலவற்றில் தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார்.

தற்போது நடந்து முடிந்துள்ள மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரிணாமூல் குறைந்தது 12 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது 10 இடங்களில் முன்னிலையில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் இறுதியில் 5 இடங்களை கைப்பற்றியது.

மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வெற்றி குறித்து பேசிய மம்தா பானர்ஜி, “ஆறு மாதங்களுக்கு முன்புதான் இம்மாநிலத்தில் பணியை தொடங்கினோம். தற்போது 15 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளோம். இந்த வெற்றி எனது கட்சியின் தேசிய அந்தஸ்துக்கு உதவும். நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அடுத்தமுறை இன்னும் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் 2024 சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய போது, “2024-ல் திரிணாமுல் கட்சி மக்களுடன் தான் கூட்டணி அமைக்கும். மற்ற எந்த அரசியல் கட்சிகளுடனும் நாங்கள் கூட்டணியில் இணைந்து செல்ல மாட்டோம். மக்கள் ஆதரவுடன் தனித்து போட்டியிடுவோம்” என்று கூறியுள்ளார்.

ஒற்றை எதிர்கட்சி அணியை உருவாக்க நினைக்கும் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மம்தாவின் இந்த அறிவிப்பு, பாஜக அணியினருக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மம்தாவை பின் தொடர்ந்து வேறு சில எதிர்கட்சிகளும் காங்கிரஸுடன் இணைந்து செல்லவில்லை என்றால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணக்கு போடுகின்றனர்.

மம்தா 2024 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்தால் அவரை பின் தொடர்ந்து தெலங்கானா கே.சந்திரசேகர் ராவ் உள்ளிட்டவர்களும் வர வாய்ப்புள்ளது. அப்படி வலுவான கூட்டணி உருவானால் பாஜகவுக்கு நெருக்கடியை கொடுக்க முடியும். ஆனால் மம்தாவோ இந்த ஒரு தேர்தலுக்காக அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டாம். தனித்து களம் கண்டு கவனம் ஈர்த்தால் அடுத்தடுத்த தேர்தல்களில் திரிணாமூல் கட்சி காங்கிரஸ் இடத்தை பிடித்துவிடும் என்று திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

தனித்து போட்டி என்று பாஜகவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் மம்தா பானர்ஜி 2024 மக்களவைத் தேர்தலில் முதல் ஆளாக பரபரப்பை கூட்டியுள்ளார்.

The post மம்தா தனித்து போட்டி – பாஜக சர்ப்ரைஸ்-காங்கிரஸ் ஷாக் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
24409
ஈரோடு இடைத்தேர்தல் – அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? https://koodal.com/news/2023/03/03/erode-by-election-will-it-have-a-political-impact/ Fri, 03 Mar 2023 08:10:08 +0000 https://koodal.com/?p=24405 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இது அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? நடந்து முடிந்திருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ்…

The post ஈரோடு இடைத்தேர்தல் – அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இது அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா?

நடந்து முடிந்திருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 49,981 வாக்குகளைப் பெற்றிருக்கும் நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். வாக்கு வித்தியாசம் மட்டும் 66,575ஆக இருக்கிறது. கடந்த முறை, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் வெற்றிபெற்ற திருமகன் ஈ.வெ.ரா. வாங்கிய மொத்த வாக்குகளே 67,300தான் என்பதைப் பார்க்கும்போது இது மிகப் பெரிய வாக்கு வித்தியாசமாகும்.

இந்தத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொருவிதமான ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். தி.மு.கவைப் பொறுத்தவரை, இதற்கு முன்பெப்போதும் இல்லாதவகையில் ஒரு இடைத்தேர்தலை சந்தித்து, தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் தனது ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது என்பதை காட்ட முயன்றிருக்கிறது.

ஆனால், இடைத்தேர்தலில் இம்மாதிரி மிகப் பெரிய வெற்றிபெறுவது தி.மு.கவுக்கு புதிதல்ல. அது ஒருபோதும் ஆளும் கட்சி மீதான நல்லெண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருந்ததில்லை.

2009ஆம் ஆண்டில், மதுரை திருமங்கலம் தொகுதியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் வீர இளவரசு இறந்துவிட இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தலில் தி.மு.கவின் சார்பில் லதா அதியமான் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.கவின் எம். முத்துராமலிங்கம் போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரியின் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டது தி.மு.க. இதில் கிட்டத்தட்ட 39,000 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெற்றது. ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்ற சொல்லாடலே இந்தத் தேர்தலை ஒட்டி உருவானது. ஆனால், 2011ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் எம். முத்துராமலிங்கமே வெற்றிபெற்றார். ஒரு கொண்டாட்டத்திற்கான தருணத்திற்கு வேண்டுமானால், இந்தத் தேர்தல் தி.மு.கவுக்கு பலனளித்திருக்கலாம்.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, தேர்தல் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் பல பாடங்களை மிகக் கடினமான முறையில் கற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த தினத்தன்று தொலைக்காட்சி விவாதங்களில் அ.தி.மு.க. சார்பில் பேசிய பலரும் தங்களுக்குப் போதுமான கால அவகாசம் இல்லை என்று குறிப்பிட்டனர்.

அந்த வாதத்தில் ஓரளவுக்கு உண்மை இருந்தது. தேர்தல் அறிவித்ததும் தி.மு.க., நா.த.க., ஏன் தே.மு.தி.க.கூட தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்குத் தயாரான நிலையில், அ.தி.மு.கவில் எடப்பாடி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் ஆளுக்கொரு வேட்பாளர்களை அறிவித்து தொண்டர்களை குழப்பத்தில் வைத்திருந்தனர். பா.ஜ.கவும் தனது ஆதரவு ஒன்றுபட்ட அ.தி.மு.கவுக்குத்தான் என்றுகூறி இன்னும் திகைக்க வைத்தது. தேர்தலில் வேட்புமனு தாக்கல் முடிவதற்கு ஒரு நாள் முன்புதான் எல்லாக் களேபரங்களும் முடிவுக்கு வந்து தென்னரசு வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார்.

இதற்குப் பிறகு, அ.தி.மு.கவின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது என்றாலும் ஆரம்பத்தில் இருந்த குழப்பத்தால் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து அந்தக் கட்சி மீளவே இல்லை. வாக்குப்பதிவிற்கு சில நாட்களுக்கு முன்பாக, எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பே உண்மையான அ.தி.மு.க. என்ற வகையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டாலும்கூட, அந்த உற்சாகம் களத்தில் பெரிதாக எடுபடவில்லை. தேர்தல் களத்தில் தி.மு.க. கையாண்ட எல்லா அம்சங்களையும் அ.தி.மு.கவும் அதற்கு ஒரு படி குறைவான நிலையில் கையாண்டது. இருந்தபோதும் கடந்த தேர்தலோடு ஒப்பிட்டால் பெரும் பின்னடைவையே சந்தித்திருக்கிறது.

எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்துவருவதும் அக்கட்சியினருக்கு உற்சாகமூட்டுவதாக இருக்காது. இதற்கு முன்பாக, 2017ல் நடந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.கவை சுயேச்சையாக நின்ற டிடிவி தினகரன் தோற்கடித்தார். 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி ஒரு இடைத்தேர்தலில் தோற்றது அப்போதுதான்.

இதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து தோல்விகளையே அ.தி.மு.க. சந்தித்து வருகிறது.

ஆனால், அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகளைப் பொறுத்தவரை, வலுவாக எடப்பாடி கே. பழனிச்சாமியின் பின்னால் நிற்கிறார்கள் என்பதால் கட்சிக்குள் அவரது நிலைக்கு பெரிய பாதிப்பில்லை. ஆனால், பொதுமக்களிடம் அவர் ஒரு வலுவான தலைவரா என்ற கேள்வியை இந்தத் தேர்தல் தோல்விகள் ஏற்படுத்தும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது, கூட்டணி பேரங்களிலும் பிரசாரங்களிலும் இந்த தோல்விகள் மன ரீதியாக ஒரு உறுத்தலாகவே இருக்கும்.

இந்தத் தேர்தலில் மிகப் பெரிய அதிர்ச்சி என்றால், அது நாம் தமிழர் கட்சிக்கும் தே.மு.தி.கவிற்கும்தான். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கோமதி 11,629 வாக்குகளைப் பெற்றார். இது பதிவான வாக்குகளில் 7.65 சதவீதம். ஆனால், இந்த முறை நாம் தமிழர் கட்சி 10,804 வாக்குகளையே பெற்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட 800 வாக்குகள் குறைவு என்பதோடு, வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த முறை, 7.65 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சி, இந்த முறை பதிவான வாக்குகளில் 5 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலியார்கள், அருந்ததியர்கள் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமூக ரீதியிலும் மொழிரீதியிலும் வாக்காளர்களைப் பிரித்து, வாக்குகளைச் சேகரிக்க முயல்கிறாரா என்ற கேள்விகளையும் எழுப்பியது.

ஆனால், பிரச்சார களத்தில் நாம் தமிழர் கட்சியினர் மிக சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு இணையாக நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்தைப் பார்க்க முடிந்தது. அந்தப் பிரச்சாரத்தைத் தாண்டியும் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

இந்தத் தேர்தலிலேயே மிக மிக மோசமாக பின்னடைவைச் சந்தித்திருக்கும் கட்சி என்றால், அது தே.மு.தி.கதான். 2008ல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டவுடன், 2011ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் சந்திரகுமார் நிறுத்தப்பட்டு, அவர் வெற்றியும்பெற்றார். இதற்கடுத்தடுத்த தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு இந்தத் தொகுதியில் பின்னடைவுதான் ஏற்பட்டது.

ஆனால், இந்த முறை இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மிகுந்த உற்சாகத்துடன் வேட்பாளரை அறிவித்தது தே.மு.தி.க. ஏற்கனவே தங்கள் வசம் இருந்த தொகுதி இது என்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஆனால், விஜயகாந்தின் உடல்நிலை மிக மோசமாகவே இருந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த்தும் அவரது மகன்களுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பிரச்சாரக் களத்தில் இல்லாதபோது, தேர்தல் பணியாற்ற ஆட்களும் இன்றி, போதுமான நிதியும் இன்றி தவித்தது தே.மு.தி.க.

முடிவில் வெறும் 949 வாக்குகளையே அந்தக் கட்சி பெற்றிருக்கிறது. இந்தத் தோல்வி, அந்தக் கட்சியைப் பொறுத்தவரை மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. ஏற்கனவே 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து வெறும் 60 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வியைச் சந்தித்தது. இனிவரவிருக்கும் தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு எவ்விதமான பேர வலிமையும் இருக்காது என்பதோடு, அக்கட்சியை சேர்க்க பிரதான கட்சிகள் யோசிக்கும் நிலையையும் இந்தத் தோல்வி ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவு ஒவ்வொரு கட்சிக்கும், தலைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

“இந்தத் தேர்தலின் மூலம் மு.க. ஸ்டாலின் தான் ஒரு ஆளுமை என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். எடப்பாடியைப் பொறுத்தவரை, அவர் தேர்தல் வெற்றியின் மூலம்தான் அதைச் சாதிக்க முடியும். இந்த முறையும் அவருக்கு அது தவறிப் போயிருக்கிறது.

ஆனால், இதற்காக, அ.தி.மு.கவினர் அவரை விட்டு விலகி ஓ. பன்னீர்செல்வம் பக்கம் செல்வார்கள் எனச் சொல்ல முடியாது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, அக்கட்சி களத்தில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதை துல்லியமாக எடைபோடுவதற்கான இடம், இந்தத் தொகுதி இல்லை.

இரு பெரிய கட்சிகளும் கடுமையாக மோதிய தொகுதியாக இருந்ததால், அக்கட்சியின் உண்மையான வளர்ச்சி தெரியாமல் போய்விட்டது. தே.மு.தி.கவைப் பொறுத்தவரை, அக்கட்சி தமிழ்நாட்டில் தன்னுடைய இருப்பிற்கான நியாயத்தை இழந்துவிட்டது. இந்தச் செய்திகளைத்தான் இந்த இடைத்தேர்தல் சொல்லியிருக்கிறது” என்கிறார் ப்ரியன்.

நன்றி: படம் BBC

The post ஈரோடு இடைத்தேர்தல் – அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
24405
ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மைக் கொலையாளிகள் யார்?: பழ. நெடுமாறன்! https://koodal.com/news/2022/11/17/who-were-the-real-killer-in-the-rajiv-assassination-pazha-nedumaran/ Thu, 17 Nov 2022 09:17:09 +0000 https://koodal.com/?p=16996 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மீது சந்தேகம் எழுப்பி தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 1991ஆம் ஆண்டு மே மாதம்…

The post ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மைக் கொலையாளிகள் யார்?: பழ. நெடுமாறன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மீது சந்தேகம் எழுப்பி தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று திருப்பெரும்புதூரில் முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். யார் படுகொலை செய்யப்பட்டாலும் வருந்தத்தக்கதேயாகும். அதிலும் அன்னை இந்திராகாந்தியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டது எல்லோருக்கும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் கொடுத்தது. ஆனால் இராசீவ்காந்தியின் படுகொலையில் தொடர்புள்ள உண்மையான குற்றவாளிகளையும் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களையும் கண்டறிந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்குப் பதில் இந்த வழக்கு புலனாய்வில் நீதி, நேர்மை, உண்மை ஆகியவை முற்றிலுமாக மறைக்கப்பட்டன. புலன் விசாரணையில் தொடங்கி வழக்கு நடத்தப்பட்ட விதம், தடா நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றில் பல உண்மைகள் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.

தேசத் தந்தை காந்தியடிகளின் கொலை வழக்கு விசாரணையும், தலைமையமைச்சராக இருந்த இந்திராகாந்தியின் கொலை வழக்கு விசாரணையும் பகிரங்கமாக நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் சாட்சிகள் என்ன கூறினார்கள், குறுக்கு விசாரணையில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்பது போன்ற சகல விவரங்களும் அன்றாடம் பத்திரிகைகளின் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இராசீவ்காந்தியின் கொலை வழக்கு விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது. காந்தியடிகள் மற்றும் இந்திராகாந்தியின் கொலை வழக்குகள் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், இராசீவ்காந்தியின் கொலை வழக்கு கொடிய தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. இதனால் எல்லாமே இரகசியமாகவும் மூடுமந்திரமாகவும் நடத்தப்பட வழிவகுக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 13 பேர்கள் ஈழத் தமிழர்கள் 13 பேர்கள் சரிசமமான எண்ணிக்கையில் மொத்தம் 26 தமிழர்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டது ஏதோ தற்செயல் அல்ல. ஆழமான உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது. தமிழீழத்தில் நடைபெற்றுவரும் விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தில் பரவவிடாமல் தடுக்கவும், தமிழ்த்தேசிய உணர்வைச் சிதைப்பதற்காகவும் திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டது. இராசீவ் படுகொலை நடைபெற்ற மூன்று நாட்களில் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகத்தின் பொறுப்பாளராக இலண்டனில் இருந்த தளபதி கிட்டு 24-5-91 அன்று விடுதலைப் புலிகளுக்கும் இந்தக் கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். அது மட்டுமல்ல, உண்மையில் இந்த கொலையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க புலன் விசாரணைக் குழுவிற்குத் தாங்கள் உதவத் தயார் என்றும் பகிரங்கமாகக் கூறினார். ஆனால், அவரைச் சந்தித்து விசாரிக்க புலன்விசாரணைக் குழு முன்வரவில்லை.

பாலஸ்தீன இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் இராசீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என எச்சரிக்கை செய்திருந்தார். எத்தகைய அடிப்படையில் இவ்வாறு எச்சரிக்கை செய்தீர்கள் என அவரிடம் புலன் விசாரணைக் குழு விசாரிக்கவேயில்லை. 26 பேர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த ரங்கநாத் என்பவர் சிவராசனுடன் தான் டெல்லிக்கு சந்திராசாமி வீட்டுக்கு இருமுறை சென்றதாகக் கூறியிருந்தார். அது குறித்து சந்திராசாமியிடம் எதுவும் விசாரிக்கவில்லை. இராசீவ் கொலை நடந்த நேரத்தில் சுப்பிரமணியசுவாமியின் நடமாட்டம் மர்மமாகவே இருந்ததாக அவருடனே இருந்த திருச்சி வேலுச்சாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய போதும் சுப்பிரமணிய சுவாமியைப் புலனாய்வுக் குழு விசாரிக்கவேயில்லை.

விடுதலைப் புலிகளுடன் பிரேமதாசா நடத்திய பேச்சுவார்த்தை முறிந்துவிட்ட காலக்கட்டத்தில் தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையமைச்சராக இருந்த இராசீவ் காந்தியைச் சந்திக்க அனுமதி கேட்டபோது அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டு 5-3-91இல் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் விசயத்தில் தான் தவறு செய்துவிட்டதாக இராசீவ்காந்தி கூறினார். அது மட்டுமல்லாமல் தான் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகவும், அதுவரை போராட்டத்தைத் தாக்குப்பிடித்து நடத்திவருமாறும் இராசீவ் கூறினார். இந்த விவரம் அனைத்தும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அதைக் கேட்டு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அதைப் போல அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலண்டனைச் சேர்ந்த ஈழத்தமிழரான அர்ச்சனா சிற்றம்பலம் என்பவர் இராசீவ் காந்தியைச் சந்தித்துப் பேசினார். அவரிடமும் இராசீவ் காந்தி மனம் விட்டுப் பேசினார். கவிஞர் காசிஆனந்தனிடம் கூறிய செய்திகளையே இவரிடமும் இராசீவ்காந்தி கூறினார். இச்செய்திகளைக் கேட்டு இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசா அதிர்ச்சியடைந்தார். ஏற்கெனவே இராசீவ் மீது கடும் வெறுப்புக்கொண்டிருந்த அவர் புலிகளுடன் இராசீவ் சமரசமாகப் போகக்கூடிய சூழ்நிலையைக் கண்டு திடுக்கிட்டார். இராசீவ் காந்தி மீண்டும் பிரதமராகி விடுதலைப் புலிகளுக்கு உதவுவதின்மூலம் தனக்கு பெரும் நெருக்கடி ஏற்படலாம் என அஞ்சினார்.

இலங்கை அரசியலில் தனது அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டியவர் பிரேமதாசா என்பதை மறந்துவிடக்கூடாது. பிரேமதாசா அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகித்த அதுலத் முதலி அமைச்சர் பதவியில் இருந்து விலகி பிரேமதாசாவுக்கு எதிராக செயல்பட்டார். 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் அதுலத் முதலியைத் திட்டமிட்டுப் படுகொலை செய்தவர் பிரேமதாசா என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவராக இருந்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமார ரணதுங்கா கொலைக்கும் பின்னணியில் பிரேமதாசா இருந்தார் என்பது பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே பிரேமதாசாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட காமினி திசநாயகா என்னும் தலைவரும் படுகொலை செய்யப்பட்டார். இவரின் கொலையைப் பற்றி விசாரித்த ஆணையம் இந்தக் கொலையிலும் பிரேமதாசாவுக்குத் தொடர்பு இருந்தது என கூறியது. எனவே இராசீவின் கொலையிலும் பிரேமதாசாவின் கைவண்ணம் இருக்குமோ என்ற கேள்வி நியாயமற்றது என்று கூறிவிடமுடியாது. இந்தக் கோணத்தில் புலன் விசாரணை நடைபெறவே இல்லை.

இராசீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை இருந்ததா என்பதை ஆராய்வதற்கு நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு சூன் மாதம் நீதிபதி தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் அளித்தார். எதிர்க்கட்சியினரின் வற்புறுத்தலுக்குப் பிறகே 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. சவான் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியைக் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் தலைமையமைச்சர் நரசிம்மராவுக்கு ஏற்பட்டது. ஆனாலும் இரண்டாண்டு காலமாக இந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. பிறகு, மத்திய அமைச்சர் ஐவரைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு இந்த அறிக்கையைப் பரிசீலித்து அரசாங்கத்திற்குக் கூற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்த குழு பரிந்துரை செய்தது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1996ஆம் ஆண்டு இந்த அதிகாரிகள் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு அவர்களிடம் விளக்கம் கேட்கும் குறிப்புகள் அனுப்பப்பட்டன.

யார் யார் அந்த அதிகாரிகள் என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு மிக நெருக்கமானவர்கள் என்று கூறப்படும். அமைச்சரவைச் செயலாளராக இருந்த வினோத் பாண்டே, உளவுத்துறை தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறைச் செயலாளர் சிரோண்மனி சர்மா, பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய் ஆகியோரே இந்த முக்கியமான அதிகாரிகள் ஆவார்கள். ஓய்வுப்பெற்ற பிறகு இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த நான்கு பேரும் மத்திய நிர்வாக மன்றத்திற்கு மேல்முறையீடு செய்தனர். ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பது முறையற்றது என்று அது ஆணை பிறப்பித்தது. மேற்கண்ட அதிகாரிகள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டனர். இந்த அதிகாரிகளில் ஒருவரான எம்.கே. நாராயணன் பிற்காலத்தில் மன்மோகன் சிங் தலைமையமைச்சராக இருந்தபோது அவருக்கு தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் என்பது முக்கியமானதாகும்.

தலைமையமைச்சராக நரசிம்மராவ் இருந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்த முக்கியக் கோப்புகள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டதை புதுதில்லியில் இருந்து வெளிவரும் அவுட்லுக் வாரஏடு (24-11-97) தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இதற்கு அரசாங்கத் தரப்பிலோ அல்லது உளவுத்துறைத் தரப்பிலோ எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. இராசீவ் கொலை வழக்கு தொடர்பாக குமார் என்னும் சி.பி.ஐ. அதிகாரி வெளிநாடுகளுக்குச் சென்றார். இலண்டன் வழியாக இந்தியாவுக்குத் திரும்பும்போது இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இந்த வழக்குகள் தொடர்பான கோப்புகள் அடங்கிய அவரது கைப்பெட்டி காணாமல் போய்விட்டது. முக்கியக் கோப்புகளைத் தொலைத்த அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? காணாமல் போன கோப்புகளைத் திரும்பப்பெற மேற்கொண்டும் முயற்சிகள் எடுக்கவில்லையே ஏன்? இந்த கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

இராசீவ் கொலை வழக்கு நேர்மையுடனும் நீதிமுறையுடனும் நடத்தப்படவில்லை. சர்வதேச நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சுமார் 5 ஆண்டுகள் வரை தடா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. முதல் 4 ஆண்டுகள் வரை நீதிபதியாக சித்தீக் என்பவர் பதவி வகித்தார். பிறகு அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுபெற்றுச் சென்றார். அதற்குப் பிறகு நீதிபதியாக நவநீதன் என்பவர் பொறுப்பேற்றார். 4 ஆண்டு காலம் நடைபெற்ற வழக்கில் 288பேர் சாட்சியம் அளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணங்களும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன. இவை அத்தனையையும் ஓராண்டு காலத்திற்குள் படித்து உண்மை என்ன என்பதை உணர்ந்து தீர்ப்பளிப்பது என்பது யாராலும் முடியாத ஒன்று. ஆனால் நீதிபதி நவநீதன் அதை சாதித்தார். 26 பேருக்கும் தூக்குத் தண்டனையை விதித்தார். அவருக்குச் சொல்லப்பட்டதை அவர் செய்தார் என்பதுதான் இதிலிருந்து அம்பலம் ஆகிறது.

தடா நீதிமன்றம் 26 தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனையை விதித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் 19 பேரை முழுமையாக விடுதலை செய்தும். 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் தீர்ப்பளித்தது. அப்படியானால் தடா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதியின்பால் பட்டதே அல்ல என்பது நிரூபணமாயிற்று. கீழ் நீதிமன்றத்தில் 26 தமிழர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சியங்களில் எந்த மாறுதலுமில்லை. புதிய சாட்சியங்கள் உச்சநீதிமன்றத்தில் கூறப்படவில்லை. அப்படியானால் மேற்கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் தடா நீதிமன்றம் ஒரு தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வேறுஒருவகையான தீர்ப்பையும் அளித்திருப்பது என்பது ஒரு உண்மையை தெளிவாக்கியுள்ளது. மனிதர்களின் தீர்ப்புகளுக்கிடையே பெருமளவு வேறுபாடுகளும், குறைபாடுகளும் உண்டு என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. இராசீவ் கொலை வழக்கு தடா சட்டத்தின்கீழ் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதே தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மட்டும் எப்படி செல்லுபடியாகும்? அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நால்வருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயமானதாகும். ஒப்புதல் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மூன்றாந்தர முறைகளைக் கையாண்டு பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களில் அடிப்படையில் தண்டனையை உறுதி செய்தது நீதியானதல்ல. இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

The post ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மைக் கொலையாளிகள் யார்?: பழ. நெடுமாறன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16996
எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா ஜெ https://koodal.com/trending-stories/2022/10/18/when-our-amma-jeyalalitha-dead/ Tue, 18 Oct 2022 16:04:03 +0000 https://koodal.com/?p=14873 எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா “ஜெ” முழுமையாக அம்பலப்படுத்தியதா ஆறுமுகசாமி ஆணையம்! சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு! 18.10.2022 இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற நீதியரசர் ஆறுமுகம் ஆணையம், சமீபத்தில்…

The post எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா ஜெ appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா “ஜெ”

முழுமையாக அம்பலப்படுத்தியதா ஆறுமுகசாமி ஆணையம்!

சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு!

18.10.2022 இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற நீதியரசர் ஆறுமுகம் ஆணையம், சமீபத்தில் தமிழ்நாடு அரசுக்கு அளித்த விசாரணை அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

ஜெயலலிதா இறந்த நேரம் 05.12.2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 04.12.2016 அன்று மதியம் 3 மணியிலிருந்து 3:50 மணிக்குள் அவர் இறந்துவிட்டதாக சாட்சிகள் கூறுவதாக நீதிபதி ஆறுமுகசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மயங்கி விழுந்த ஜெயலலிதா

ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார்.

அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.

ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக மறைந்த முதல்வருக்கு மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கி முதலுதவி அளித்தனர்.

சிறிதும் தாமதிக்காமல், மயங்கி விழுந்த முதல்வரை உடனடியாக ஆம்புலன்சில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்நோயாளியாக அனுமதித்தனர்.

முதல்கட்ட நோயறிதலுக்கு பின் அவர் ஐ.சி.யூ வுக்கு மாற்றப்பட்டபோது, ஸ்ட்ரெச்சரில் இருந்த அவருக்கு சுயநினைவு வந்தது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் உறவினர்களாலேயே அறைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சுமூகமாக இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடைசி மூச்சு வரை நடக்காத ஆஞ்சியோ அறுவை சிகிச்சை

ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, ஹைப்போ தைராடிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்ததாக சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் மூலம் அறியப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.

ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை கேள்வி எழுப்புகிறது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும் என்றும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது தனக்கு அளிக்கப்படவிருந்த சிகிச்சை தொடர்பாக ஒப்புக்கொண்டது என்ன, சசிகலா தவிர வேறு யார் மீதெல்லாம் விசாரணை செய்யப்பட வேண்டும் என வழங்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சுயநினைவுடன் ஒப்புதல் அளித்த ஜெயலலிதா

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சமின் சர்மா, 25.11.2016 அன்று மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது அவருடன் விவாதித்து முன்மொழியப்பட்ட சிகிச்சைக்கு மறைந்த முதல்வர் ஒப்புதல் அளித்தார்.

மறைந்த முதல்வரின் இதயத்தில் வளர்ந்த வெஜிடேஷன் மற்றும் இதர உடல்நல கோளாறுகளை கருத்தில் கொண்டு உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பது மேற்சொன்ன அமெரிக்க மருத்துவரின் கருத்தாக இருந்தது. (பக்கம் 551, 552 – 47.16 )

மேற்சொன்னவை 25.11. 2016 அன்று டாக்டர் பாபு ஆபிரகாமால் எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டிருந்தது.

புத்திசாலி பெண்மணியான மறைந்த முதல்வர் அவருக்கு இதே அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்ட உடனேயே அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவர் அதற்கு ஒப்புக்கொண்டிருப்பார்.

இரண்டு மாதங்களுக்கு பின்னர் இங்கிலாந்தில் இருந்து வந்த தீவிர சிகிச்சை மருத்துவரின் கருத்துப்படி இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு மாற்றப்பட்டது.

‘ஆனால் அன்று மருத்துவ ரீதியாக மறைந்த முதல்வரை பரிசோதிக்காத இங்கிலாந்து மருத்துவர் எழுத்துப் பூர்வமாக அல்லாமல் நேரடியாக வாய்மொழியாக கருத்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது’ என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாபு ஆபிரகாம் அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளார்.

இம்முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்க மருத்துவர் தவிர சசிகலாவுக்கும் இருந்தது.

நெருக்கடியின் போது முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சையை தொடராமல் தவறிழைத்திருக்கலாம்.

இது (கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை) அமெரிக்க மருத்துவரின் கருத்துப்படி மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம். (பக்கம் 552, 553 – 47.17 )

*’தந்திரம் செய்த டாக்டர் பாபு ஆபிரகாம்’*

அன்றே நடைமுறையை செய்ய ஒப்புக்கொண்ட டாக்டர் சமின் சர்மாவின் கருத்தை முதல்வர் ஏற்றுக்கொண்ட பின்னர் இம்மாற்றம் பின்னிட்டு யோசனையாக வந்துள்ளது.

டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்யத் தயாராக இருந்து மறைந்த முதல்வரும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு நுரையீரல் நிபுணரான டாக்டர் பாபு ஆபிரகாம் ஏன் டாக்டர் ரிச்சர்டு பீலேவை அழைக்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது அப்போலோ மருத்துவமனை ஆவணங்களில் பதிவுகளில் இருந்து தெளிவாகிறது.

எனவே, ஆஞ்சியோவை தவிர்ப்பதற்காக சில அதிகாரம் பெற்றவருக்கு உதவ டாக்டர் பாபு ஆபிரகாம் தீவிர மருத்துவரான டாக்டர் ரிச்சர்ட் பீலே அறுவை சிகிச்சை தள்ளிப் போடலாம் என்று கருத்து தெரிவித்ததாக ஒரு தந்திரம் செய்து அமெரிக்க மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆலோசனை வழங்கினார் என்று ஆணையம் முடிவு செய்கிறது. (பக்கம் 553 – 47.18)

ஜெயலலிதா இதய செயலிழப்பு ஏற்பட்டது எப்போது?

மறைந்த முதல்வரின் இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும்.

இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 05.12.16, அன்று இரவு 11:30 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் இறுதி நேரத்தில் அவரைக் கவனித்துக் கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது.

04.12.16 அன்று பிற்பகல் 3:50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு இல்லை மற்றும் ரத்த ஓட்டம் இல்னல என்பதை அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்களின் தெளிவான சாட்சியங்களாகும். (பக்கம் 537 – 46.71)

வேறு தேதியில் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு
மறைந்த முதல்வரின் மருமகன், தீபக்கின் சாட்சியத்தின்படி, மனறந்த முதல்வரின் மரண நேரத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்.

நோயுற்ற மறைந்த முதல்வரை அருகிலிருந்து கவனித்துக்கொண்ட மற்றும் அவர் மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த நிகழ்வுகளையும் முன்னேற்றங்களையும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையையும் அவ்வப்போது முழுமையாகத் தெரிந்த அவரின் ஓட்டுநர் மற்றும் பூங்குன்றன் ஆகிய இருவரின் தகவலின் அடிப்படையில், 04.12.2016 அன்று மதியம் 3:00 முதல் 3:30 மணி வரை என மறைந்த முதல்வரின் இறந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு, அவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவை தீபக் அனுசரித்தார் என்பது அவரது சாட்சியமாகும். (பக்கம் 538 – 46.73)

ஜெயலலிதா ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை!

ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.

ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை (பக்கம் 557 – 47.27. ஒ)

இரண்டு நுரையீரல்களிலிருந்தும் (ஒரு நாளைக்கு சுமார் 1000 மிலி) பெருமளவிலான திரவம் வெளியேற்றப்படுவதைக் கருத்தில் கொண்டாவது, மருத்துவமனையில் ஆதரவாக நெருங்கிய உறவினர் இல்லாத மனறந்த முதல்வர் மீது சில அனுதாபங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். (பக்கம் 558 – 47.27.ஓ)

டாக்டர் ரிச்சர்ட் பீலே மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாரென்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 – 47.27)

டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்வதைப் பற்றி விளக்கியபின், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 – 47.27. அ.அ)

சசிகலா தவிர யார் மீது விசாரணைக்கு பரிந்துரை?

இந்த அனைத்து கருத்துகளில் இருந்தும், வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ.ராதா கிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.
47.29.

டாக்டர் ஒய்.வி.சி.ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

அவர்கள் பம்பாய், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினர்.

எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் ராமோகன் ராவை பொறுத்தவரை செயல்முறைகளுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவிக்கவில்லை என்பதைத் தவிர ஆணையம் அவருக்கு எதிராக குறைகள் எதையும் காணவில்லை.

நிச்சயமாக இது ஒரு நபரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும்.

குறிப்பாக இது முதல்வரது உயிர் தொடர்பானது என்பதால் அதற்கான விளைவுகளை நிச்சயம் பெறுவார் எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. (பக்கம் 559 – 47.30)

அப்போலோ பிரதாப் ரெட்டி வெளியிட்ட பொய்யான அறிக்கை

அதே போல அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி உண்மைகளைத் தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும் செய்தியாளர் சந்திப்பில் மறைந்த முதல்வர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டார்.

இரண்டாவதாக அவர் தனது அறையில் அடிக்கடி விளக்க கூட்டத்தை நடத்திய போதிலும் மறைந்த முதல்வரின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தத் தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவசிகிச்சை தர்மத்தை மீறிய தமிழகம் முழுவதும் உள்ள “அப்பல்லோ” மருத்துவமனைகளை மூட மருத்துவ கவுன்சில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று,
சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று புகழப்பட்ட மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பல்வேறு முரணான அறிக்கைகளை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், சாதாரண பொது மக்களுக்கு அளிக்கும் சிகிச்சை முறையில் செய்யப்படும் குளறுபடிகள் எவ்வளவு நடந்திருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் அங்காலாய்க்கின்றனர்.

மொத்தத்தில் எப்பப்பா செத்தாங்கா? எப்படி செத்தாங்க? எங்கம்மா என்று ஏங்கிய அ.தி.மு.க வின் தொண்டர்களுக்கு, ஆறுமுகசாமி அம்பலப்படுத்திய விவரங்கள் பெரும் அதிர்ச்சியையும், கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.

*கூடல்.காம்*
18.10.2022

The post எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா ஜெ appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
14873
காவிரி விவகாரத்தில் வஞ்சித்த இந்தியத் தலைவர்கள் -பழ. நெடுமாறன் https://koodal.com/trending-stories/2022/06/13/indian-leaders-deceived-in-the-cauvery-river-affair/ Mon, 13 Jun 2022 06:31:29 +0000 https://koodal.com/?p=5985 தமிழகத்தை வஞ்சித்தத் தலைமையமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும் -பழ. நெடுமாறன் தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது என்னும் இடத்தில் புனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினை அமைக்க…

The post காவிரி விவகாரத்தில் வஞ்சித்த இந்தியத் தலைவர்கள் -பழ. நெடுமாறன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழகத்தை வஞ்சித்தத் தலைமையமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும் -பழ. நெடுமாறன்

தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது என்னும் இடத்தில் புனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினை அமைக்க அணை ஒன்று கட்டப் போவதாக 1982ஆம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று கருநாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ் அறிவித்தார்.

6-2-1982 அன்று ஆளுநர் உரையின்மீது நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது “1961ஆம் ஆண்டிலேயே தமிழகம் திட்டமிட்டுள்ள ஒகேனக்கல் புனல் மின் திட்டம் இதனால் பாதிக்கப்படும். மேக தாது திட்டம் அமைக்கப்பட்டால் ஒகேனக்கல் திட்டத்திற்கு தண்ணீர் வராது. அத்திட்டத்தை கைவிடவேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் மேட்டூருக்கு வரும் தண்ணீர் அடியோடு தடுக்கப்படும். தமிழகம் மின்சாரப் பற்றாக்குறை மாநிலமாகும். ஆனால் கருநாடகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகும். தமிழ்நாட்டிற்கு காவிரி ஒன்றே பெரிய ஆறு ஆகும். தமிழ்நாட்டின் நிலப்பகுதியில் 34% பகுதி காவிரிப் படுகையிலேயே அமைந்துள்ளது. கருநாடகத்தில் காவிரிப் படுகையின் பரப்பளவு அதன் நிலப்பகுதியில் 17% மட்டுமே. தமிழ்நாட்டு ஆற்றுப்பாசன நிலத்தில் 60% காவிரி ஆற்றின் நீரையே நம்பியுள்ளது. ஆனால், கருநாடகத்தில் காவிரி மட்டுமின்றி, கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆற்றின் கிளை ஆறுகள், துங்கபத்திரா கிளை ஆறு மற்றும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பலவும் உள்ளன. மேற்கண்ட ஆறுகளில் இருந்து கருநாடகம் 6500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இருப்பினும் 1400 மெகாவாட் மின்சாரம்தான் இதுவரை அம்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 4100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழி வகை இருந்தும்கூட பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்குக் கேடுவிளைவிக்கும் வகையில் மேகதாது அணையைக்கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. தமிழக எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த அணை கட்டப்படுமானால் ஒகேனக்கல் அணையை நாம் கட்ட முடியாது. நமது திட்டத்தைக் கைவிட நேரிடும்” எனக்கூறினேன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பலரும் ஆதரவு தெரிவித்தனர். மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் எதிர்ப்பை இந்திய அரசுக்குத் தெரிவிப்பதாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உறுதியளித்தார். அதன்படியே எதிர்ப்பைத் தெரிவித்தார். முதல்வராக ஜெயலலிதா இருந்த போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். இதன் விளைவாக மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

தமிழக மின் திட்டங்கள்

தமிழகத் திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவதாக இராசிமணல் அணை கட்டப்படும். இங்கு அமைக்கப்படும் புனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அணைக்குக் கீழே 5 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அணை கட்டப்பட்டு அங்கு 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த இரண்டு அணைகளின் மூலம் 480 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும்.

இதையொட்டி மேட்டூர் அணையின் உயரம் மேலும் 10 அடி அதிகரிக்கப்படும். ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் இரண்டு அணைகளின் விளைவாக இப்பகுதியில் பாசன வசதிகள் எதுவும் செய்யப்படாது. மின்சார உற்பத்திக்காக மட்டுமே இந்த அணைகள் கட்டப்படும். இந்த அணைகளிலிருந்து வெளியேறும் நீர் மேட்டுர் அணையில் வந்து நிறையும்.

இந்த இரண்டு அணைகள் கட்டப்படுவதின் மூலம் காவிரிப் பாசனப் பகுதியில் வெள்ளச் சேத அபாயம் நிரந்தரமாக தடுக்கப்படும். தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை இதன் மூலம் தீர்க்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது இந்தியாவின் மற்ற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தைவிட அதிகமானதாகும். இப்பகுதி வன விலங்கு சரணாலயமாகவும், சுற்றுலா இடமாகவும் மாறி அந்நிய செலாவணி பெருகுவதற்கு வழி ஏற்படும். உள்நாட்டு மீன் உற்பத்தியும் பெருகும். இப்படிப் பலவகையிலும் ஒகேனக்கல், இராசிமணல் சிறந்தத் திட்டங்களாகும்.

தமிழகத்தின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இராசிமணல், ஒகேனக்கல் புனல் மின் திட்டங்களை நிறைவேற்றலாம் என தேசிய புனல் மின்னுற்பத்தி ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், இத்திட்டத்திற்கு கருநாடக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது.

ஆனால், கடந்த 35 ஆண்டு காலத்திற்கு மேலாக இத்திட்டங்களுக்கு கருநாடகம் ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் ஒன்றிய அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

இராசிமணல், ஒகேனக்கல் திட்டங்களை தமிழகம் தயாரித்து மத்திய அரசிடமும், தேசிய புனல் மின் உற்பத்தி ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதலுக்காக 25-8-1961இல் அனுப்பிய காலக்கட்டத்தில் கருநாடக அரசு மேகதாது திட்டம் குறித்துச் சிந்திக்கவும் இல்லை. எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. ஆனால், 1982ஆம் ஆண்டில் அதாவது 21 ஆண்டுகள் கழித்து மேகதாது திட்டத்தை கருநாடகம் அறிவித்தது. ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றவிடக்கூடாது என்ற உள்நோக்கத்துடனும், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிறைந்து வழிந்தோடி வரும் நீர். இடையில் எவ்வித தடையும் இல்லாமல் நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து சேருவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் மேகதாது அணையைக் கட்டுவதில் முனைந்து நிற்கிறது. மின்உற்பத்தி மட்டுமே அதன் நோக்கம் என்று சொன்னால் கருநாடகத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் ஆறுகளில் 4,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழி உண்டு. அதைச் செய்யாமல் மேகதாது திட்டத்தை கருநாடகம் முன்னிறுத்தி ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 35 ஆண்டு காலமாக முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது என்ற உண்மையை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல தமிழக அரசு தவறிவிட்டது.

மேலும், மின் உற்பத்திக்கான திட்டம் என 1982இல் கூறிய கருநாடகம், 2017ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பெங்களூர் மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்காகத்தான் மேகதாது திட்டம் என வாதாடியது. பெங்களூரிலிருந்து தொலைதூரத்தில் தமிழக எல்லையில் உள்ள மேகதாதில் அணைக் கட்டி குடிநீர் கொண்டுபோவதைவிட, பெங்களூருக்கு அருகிலேயே பல ஆறுகள் உள்ளன. அவற்றிலிருந்து தேவையான குடிநீரைப் பெற முடியும் என்பது போன்ற உண்மைகள் தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துக்கூறப்படாததின் விளைவாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உண்மை நிலையை உணரத் தவறியதாலோ தமிழகத்திற்கு எதிரான தீர்ப்பை வழங்கிவிட்டனர்.

தமிழகம் இராசிமணல், ஒகேனக்கல் ஆகிய இடங்களில் அமைக்க இருந்த புனல் மின் திட்டங்கள் குறித்து, கடந்த காலத்தில் என்னென்ன நடைபெற்றது? என்ற வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். எப்படியெல்லாம் கருநாடகம் ஒன்றிய அரசை ஏமாற்றியது? அதைப்போலவே தமிழகத்தை எப்படி வஞ்சித்தது? என்பவையெல்லாம் சோக வரலாறாகும்.

வஞ்சக வரலாறு

1996ஆம் ஆண்டிலிருந்து தமிழகமும் கருநாடகமும் புனல் மின் நிலையங்கள் அமைப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தின. தமிழகத்தில் இராசிமணல் புனல் மின் திட்டம், ஒகேனக்கல் புனல் மின் திட்டம், கருநாடகத்தில் சிவசமுத்திரம் திட்டம், மேகதாது திட்டம் ஆகிய நான்கு திட்டங்கள் குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் வெற்றிபெறவில்லை.

2009ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில் இரு மாநில அதிகாரிகளும் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. ஒகேனக்கல் இராசிமணல் திட்டங்களை மத்திய அரசே நிறைவேற்றி இரு மாநிலங்களும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என தமிழகம் கூறிய யோசனையையும் கருநாடகம் ஏற்கவில்லை. தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடன்தான் மேகதாது திட்டத்தைக் கருநாடகம் வலியுறுத்துகிறது.

2007ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் மேற்கண்ட நான்கு புனல் மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கூறுகையில் “புனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதன் மூலம் அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை வேளாண்மைப் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடுவது குறித்து நாங்கள் ஏற்கெனவே இட்டுள்ள ஆணைகள் எக்காரணம் கொண்டும் மீறப்படலாகாது” என்று திட்டவட்டமாகக் கூறியது. அதாவது தமிழகத்திற்கு அளிக்கப்படவேண்டிய நீர் குறித்தக் காலங்களில் குறித்தபடி அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குப் பொருளாகும்.

ஆனால், புனல் மின் திட்டங்களுக்கு நடுவர் மன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கருநாடகம் தவறாகப் பொருள் கூறி மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முற்படுகிறது. மேலும் காவிரிப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இன்னும் உள்ளது. தனது முடிவினை உச்சநீதிமன்றம் அறிவிக்காத வகையில் மேகதாது அணைத்திட்டம் உள்பட எத்தகையத் திட்டத்தையும் மேற்கொள்ளுவதற்கு கருநாடகத்திற்கு உரிமை கிடையாது.

1961ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் கட்டுவதற்கு திட்டமிட்ட இராசிமணல், ஒகேனக்கல் திட்டங்கள் கருநாடக மாநிலத்தின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், கருநாடகத்தின் மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமலும் நடுவர் மன்றத்தின் ஆணையை மீறியும், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைனையில் இப்பிரச்சினை இருப்பதைப் பொருட்படுத்தாமலும் கருநாடகம் அடாவடித்தனமாக செயல்படுகிறது என்ற உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. அதன் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு செல்லத் தவறியதே இதற்குக் காரணமாகும்.

“பொது மேற்பார்வைக் குழுவின் கட்டுப்பாட்டிலும், தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் கருநாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம், அணைப் பராமரிப்பு, நீர் திறப்பு உள்ளிட்டவற்றை பொது மேற்பார்வைக் குழுவே செய்ய வேண்டும்” என உச்சநீதிமன்றம் 17-8-2017 அன்று தெரிவித்துள்ள கருத்து தமிழ்நாட்டு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழகக் கட்சித் தலைவர்களும் விவசாய சங்கங்களின் தலைவர்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இக்கருத்தைத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு காவிரிப் பிரச்சினையின் கடந்த கால வரலாற்றினை தமிழகம் சார்பில் வாதாடியவர்கள் சரிவர எடுத்துச்சொல்லவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.

தகைமையற்றத் தலைவர்கள்
இந்தியா ஒரு நாடு. இந்திய மக்கள் அனைவரும் அதன் புதல்வர்கள் என வாய்கிழிய தேசிய ஒருமைப்பாட்டின் இன்றியமையாமை குறித்து உபதேசிக்கும் தலைவர்கள் பலரும் நாட்டின் தலைமையமைச்சர்களாகவோ அல்லது அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களாகவோ பதவி வகித்த காலங்களில் கட்சி கண்ணோட்டத்துடனும், தங்கள் பதவிகளைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற தன்னலத்துடனும், தமிழகத்தை எப்படியெல்லாம் வஞ்சித்தார்கள் என்ற வரலாற்றினை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ள கரும்புள்ளிகள் அவையாகும்.

செந்தமிழ் அகராதியில் தகைமை என்ற சொல்லுக்கு தகுதி, பெருமை, மதிப்பு, ஒழுக்கம் என பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பொருள்களில் எது ஒன்றுக்காவது தங்களைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளாத தலைவர்கள் தலைமையமைச்சர் பொறுப்பிலும், அகில இந்தியக் கட்சிகளின் தலைமை பொறுப்புகளிலும் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மிக்கத் துயரத்துடனும், அளவில்லாத ஆற்றாமையுடன் சுட்டிக்காட்ட வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.

காவிரிச் சிக்கலில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதியான தீர்ப்பின்படி செயல்படவேண்டிய தலைமையமைச்சர் மோடியின் அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அவ்வாறு செய்யத் தவறியதோடு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையைச் செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணையில் குறிப்பிடப்பட்ட சொல்லுக்குப் பொருள் விளங்கவில்லை என குறித்த காலம் கடந்து முறையிட்டபோது இது திட்டமிட்ட காலம் கடத்தும் வேலை என்பதைப் புரிந்துகொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தான் அடைந்த வியப்பையும், ஏமாற்றத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்ததோடு, தனது ஆணையின் வண்ணம் அமைக்கப்படவேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்திற்கான திட்டத்தை அளிக்காமல் ஒன்றிய அரசு தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பதாகக் கடிந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, மேலும் 3 மாத கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என கேட்டபோது அதன் பின்னணியையும் உச்சநீதிமன்றம் புரிந்துகொண்டது. மே-12ஆம் தேதி நடைபெறவிருக்கும் கர்நாடகத் தேர்தல் முடியும் வரை காலங்கடத்துவதே கர்நாடகத்தின் நோக்கம் என்பதை உணர்ந்த உச்சநீதிமன்றம் மே-3ஆம் தேதி வரை மட்டுமே கால நீட்டிப்புக் கொடுத்தது. காவிரி சமவெளிப் பகுதியில் வேளாண்மை வேலைகளைத் தொடங்குவதற்கு ஏற்றபடி ஆண்டுதோறும் சூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். எனவே, மே-3ஆம் தேதிக்குள் தனது தீர்ப்புக்கு ஏற்ற திட்ட வடிவத்தை அளிக்கவேண்டுமென ஆணைப் பிறப்பித்தது.

விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு அளித்த முறையீட்டு மனுவினை ஏன் முன்னதாகவே அளிக்காமல் 6 வார காலம் கடந்த பிறகு அளிப்பதின் நோக்கம் என்ன? என்ற தலைமை நீதிபதியின் கேள்விக்கு அரசின் வழக்கறிஞர் பதில் கூற முடியாமல் தலைகவிழ்ந்து நின்றார். அவருக்கு இத்தகைய தலைக்குனிவு ஏற்படவில்லை. மாறாக, தலைமையமைச்சர் மோடிதான் அவமதிக்கப்பட்டு தலைக்குனிந்து நின்றார்.

அவர் மட்டுமல்ல, இவருக்கு முன்னதாக தலைமையமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த பலரும் காவிரிப் பிரச்சினையில் தங்களின் தகைமையைக் காக்கத் தவறிவிட்டனர். 1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாத நிலையில் நடுவர் மன்றம் அமைக்கவேண்டுமென தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தபோது அப்போதைய தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்கள் அவ்வாறு செய்ய முன்வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடுத்துள்ள வழக்கினைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் இரு மாநிலங்களுக்கிடையே பேச்சு வார்த்தையின் மூலம் நல்ல முடிவு காண உதவுவதாக அவர் அளித்த வாக்குறுதியை நம்பி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கினைத் திரும்பப் பெற்றது. 1972ஆம் ஆண்டில் தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநில முதலமைச்சர்களின் பேச்சு மீண்டும் தொடங்கியது. காவிரிப் பிரச்சினை தொடர்பான புள்ளி விவரங்களை தொகுத்துத் தருவதற்கு உண்மை அறியும் குழு ஒன்றிணை அமைப்பதென முடிவு செய்யப்பட்டது. பேச்சு வார்த்தைகளை முடிக்கும் வரை எந்த மாநிலமும் புதிய பாசனப் பயன் முறைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டறிக்கையில் மூன்று மாநில முதல்வர்களும் இந்திய அமைச்சரும் கையெழுத்திட்டார்கள். ஆனால், கர்நாடகம் இந்த உடன்பாட்டையும் மீறி புதிய பாசனத் திட்டங்களை வேகமாக நிறைவேற்றத் தொடங்கியது. ஆனால் இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய தலைமையமைச்சர் இந்திராகாந்தி தனது தகைமையைக் காக்கத் தவறினார்.

1973ஆம் ஆண்டு இறுதியில் டெல்லியில் மூன்று மாநிலங்களின் முதல்வர்களும் இந்தியப் பாசன அமைச்சரும் கூடி காவிரி உண்மையறியும் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து அந்தப் புள்ளி விவரங்கள் சரியானவை என ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் மேலும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று 1974ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் “காவிரி சமவெளி அதிகார அமைப்பு” ஏற்படுத்தும் திட்டத்தை மூன்று மாநில முதல்வர்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அதன்படி அந்த அமைப்பினை ஏற்படுத்த இந்திய அரசு தவறியதோடு தனது தகைமையையும் இழந்தது.

1976ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்திய அரசு ஒரு நகல் உடன்பாட்டினை உருவாக்கியது. அதற்கிணங்க தமிழகம் பெற்று வந்த 489 டி.எம்.சி. நீரில் 100 டி.எம்.சி.யை குறைத்துக் கொள்ளவேண்டும். கர்நாடகம் பெற்றுவந்த 177 டி.எம்.சி. நீரில் 25 டி.எம்.சியை குறைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு குறைத்துக்கொள்ளப்படும் 125 டி.எம்.சி. நீரில் தமிழ்நாட்டிற்கு 4 டி.எம்.சி. நீர் அளிக்கப்பட்டு மொத்தம் 393 டி.எம்.சி. நீர் அளிக்கப்படும். கர்நாடகத்திற்கு கூடுதலாக 87 டி.எம்.சி. நீர் அளிக்கப்பட்டு மொத்தம் 239 டி.எம்.சி. நீர் பெறும். கேரளத்திற்கு 39 டி.எம்.சி. நீர் அளிக்கப்படும். முதலில் இதை ஏற்றுக்கொண்ட கர்நாடகம், பின்னர் அதை ஏற்க மறுத்துவிட்டது.

எனவே, 1990ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என ஒன்றிய அரசை தமிழகம் வற்புறுத்தியது. ஆனாலும், சட்டப்படி அவ்வாறு செய்ய வேண்டிய ஒன்றிய அரசு காலம் கடத்தியது. அப்போது தலைமையமைச்சராக இருந்த வி.பி. சிங் தனது தகைமையைக் காக்கத் தவறினார். உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு இந்தப் பிரச்சினையை விட்டுவிடுவதாக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே, உச்சநீதிமன்றம் 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடுவர் மன்றத்தை அமைத்து அரசிதழிலும் வெளியிடவேண்டுமென ஆணைப் பிறப்பித்தது. அவ்வாறே சித்தாதோஷ் முகர்ஜியை தலைவராகக் கொண்ட நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டு சூன் மாதம் 21ஆம் தேதி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. நீர் அளிக்கவேண்டும் இடைக்கால ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. ஆனால், இந்த ஆணையை ஏற்க மறுத்து கர்நாடக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இச்சட்டமன்றத்தில் அங்கம் வகித்த அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து தங்களது தகைமையைக் காக்கத் தவறின.

நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை அரசிதழில் வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் கடத்தியது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டு அரசிதழில் வெளியிடுமாறு ஆணைப் பிறப்பித்தப் பிறகே அந்த ஆணை வெளியிடப்பட்டது. அப்போது தலைமையமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ் தனது தகைமையைக் காக்கத் தவறினார்.

1993ஆம் ஆண்டு சூலை மாதம் வரை நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்கவோ, அதற்கிணங்க தண்ணீர் தரவோ கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. ஒன்றிய அரசு பாராமுகமாக இருந்தது. அப்போதை முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதன் விளைவாக ஒன்றிய அரசு தலையிட்டு தண்ணீர் அளவைக் கண்காணிக்க குழு அமைப்பதாக உறுதி கூறியது. ஆனால், அதை ஏற்க கர்நாடகம் பிடிவாதமாக மறுத்துவிட்டது. எனவே மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டது. அதன் விளைவாக இப்பிரச்சினையில் 11 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்கு அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தலைமையமைச்சருக்கு நடுவர் மன்றம் ஆணைப் பிறப்பித்தது. ஆனால், அந்த ஆணையை நிறைவேற்ற தலைமையமைச்சர் பி.வி. நரசிம்மராவ் தவறினார். பிரச்சனையை ஆறப்போடுவதற்காக சவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஒய்.கே. அலாக் என்பவர் தலைமையில் 3பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தார். இக்குழு தமிழ்நாட்டில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமும், கார் மூலமும் விரிவாகப் பயணம் செய்து பார்வையிட்டது. ஆனால், கர்நாடக பாசனப் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் மேலோட்டமாகப் பார்வையிட்டதே தவிர, விரிவாகப் பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் குழு 6 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிற்கு அளித்தால் போதும் என பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்ட தலைமையமைச்சர் அவ்வாறே செய்தார்.

பிற்காலத்தில் தலைமையமைச்சராக தேவேகெளடே பதவி ஏற்றப் பிறகு மத்திய திட்ட அமைச்சராக ஒய்.கே. அலாக் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திட்டக் குழுவின் அனுமதியில்லாமல் காவிரியிலும், அதன் துணை நதிகளிலும் கர்நாடகம் மேற்கொண்டுவந்த பாசனக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கத்துடனேயே அவர் திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவ்வாறே அவர் அனுமதியும் வழங்கினார்.

இதற்கிடையில் காவிரிப் பிரச்சனையில் தீர்வுகாணும் முயற்சியில் தலைமையமைச்சர் ஈடுபட்டிருப்பதால் நடுவர் மன்றத்தின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டுமென கர்நாடக அரசு நடுவர் மன்றத்தில் முறையிட்டது. ஆனால், அக்கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்க மறுத்தது. இந்திய அரசியல் சட்டத்தின் 262ஆவது பிரிவின்படி நடுவர் மன்றத்தின் அதிகார வரம்பு சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது. தலைமையமைச்சரின் நிர்வாக ஆணைகள் எதுவும் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எக்கட்டத்திலும் மீற முடியாது என தமிழக வழக்கறிஞர் வாதமிட்டதை நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.

காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து அதனுடன் ஒத்துழைக்கவோ, அதனுடைய ஆணைகளை நிறைவேற்றவோ கர்நாடகம் தவறியது. அதுமட்டுமல்ல, அப்போது கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவேகெளடே காவிரி நடுவர் மன்றத் தலைவர் சித்தாதோஷ் முகர்ஜி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றிருப்பதாகக் குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். தமிழகக் கோவில்களுக்கு நடுவர் மன்ற நீதிபதிகள் சென்றபோது அவர்களுக்குப் பரிவட்டம் போன்ற மரியாதைகள் செய்யப்பட்டன. இதையே பரிசுகள் என திசைத்திருப்ப தேவேகெளடா முயன்றார். அவர் கர்நாடக முதலமைச்சரான பிறகும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. பிறகு இந்தியாவின் தலைமையமைச்சர் பொறுப்பையும் அவர் ஏற்றார். தலைமையமைச்சராக உள்ளவர் தன்மீது வழக்குத் தொடர்ந்திருப்பதால் நடுவர் மன்றத் தலைவருக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற விசாரணையில் 75% முடிவடைந்துவிட்ட நிலையில் அதன் தலைவர் பதவி விலகவேண்டிய நிலையை ஏற்படுத்தியதின் மூலம் தலைமையமைச்சர் தேவேகெளடே தனது தகைமையை முற்றிலுமாக இழந்துவிட்டார்.

தேவேகெளடே அவர்களுக்குப் பின் தலைமையமைச்சர் பொறுப்பை ஏற்ற குஜ்ரால் காலத்தில் நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக வரைவுத் திட்டமும், ஆணையமும் உருவாக்குவதற்காக வழி வகுக்கப்பட்டது. சராசரி மழைக் காலங்களில் காவிரி நீரை முற்றாக கர்நாடகம் தடுத்துவிடாமல் காப்பதற்கு இத்திட்டத்தில் வழிவகுக்கப்பட்டிருந்தது. ஆனால், சில மாதங்கள் மட்டுமே குஜ்ரால் அரசு பதவியில் இருந்ததால் இத்திட்டத்தை செயற்படுத்தவில்லை.

அவரைத் தொடர்ந்து தலைமையமைச்சர் பதவியை ஏற்ற வாஜ்பாய் காலத்தில் தமிழகத்தின் நலன்களை முழுமையாகப் பாதிக்கும் வகையில் ஒரு திட்டத்தை வகுத்தார். தலைமையமைச்சரும் 4 மாநில முதல்வர்களும் அடங்கிய ஒரு உயர் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவுக்கு உதவியாக சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களையும், மத்திய நீர்ப்பாசனத் துறை செயலாளரையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் அதிகாரமற்ற குழுக்களாகும். எனவே, இக்குழுவினால் எத்தகைய முடிவும் எடுக்க முடியவில்லை.

காவிரிப் பிரச்சனை தொடங்கிய 1968ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை ஐம்பதாண்டு காலமாக பத்து தலைமையமைச்சர்கள் பதவி வகித்துள்ளார்கள். இவர்கள் யாருமே நடுவர் மன்றத் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றங்களின் தீர்ப்பையோ மதிக்காத கர்நாடக அரசின் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்க முன்வராமலும், தமிழகத்திற்கு நீதி வழங்காமலும் தங்களின் தகைமையை அடியோடு சிதைத்துவிட்டனர்.

கருநாடகத்தில் காங்கிரசு, சனதா, பா.ச.க. போன்ற அகில இந்தியக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இதில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதன் முதலமைச்சர் காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சிப்பதையே குறியாகக் கொண்டு ஒருவரையொருவர் மிஞ்சுகின்றனர். கருநாடகம்-தமிழ்நாடு ஆகியவற்றுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்த கட்டங்களில் இக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமைகள் இதில் தலையிடாமல் இருந்தது வேறு. ஆனால், பேச்சுவார்த்தை முடிந்து இப்பிரச்சனைக்கு நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றுக்குச் சென்று அவைகள் அளித்தத் தீர்ப்புகளை ஏற்க மறுத்து கருநாடகத் தலைவர்கள் செயற்பட்டபோது, அவர்களைக் கண்டித்துத் திருத்த எந்த அகில இந்தியக் கட்சித் தலைவரும் முன்வரவில்லை. தங்கள் கட்சிக்கு ஆதாயம் தேடும் நோக்கத்துடன் மட்டுமே அவர்கள் செயல்பட்டார்கள். தேசிய ஒருமைப்பாட்டில் இந்தத் தலைவர்களுக்கு நம்பிக்கை இருந்திருக்குமானால், கருநாடகத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து திருத்தியிருக்கவேண்டும். ஆனால், இன்றுவரை அத்தகைய நடவடிக்கைகளில் எந்த அகில இந்தியக் கட்சித் தலைவரும் எள்ளளவு முயற்சிகூட செய்யவில்லை.

இந்தத் தலைவர்களுக்கு தங்கள் தகைமையைக் காப்பாற்றுவதைவிட கர்நாடகத் தேர்தலில் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி வெற்றி பெறவேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது. தங்களின் தகைமையைக் காக்கத் தலைமையமைச்சர்களும், அகில இந்தியத் தலைவர்களும் தவறும்போது தமிழர்கள் அரசியல் சட்டத்தின் மாண்பை மதிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதும், தேசிய ஒருமைப்பாட்டினைக் காக்கவேண்டும் என முழங்குவதும் வீண்! வீண்! வீணே.

பன்னாட்டுப் பெரு முதலாளிகள் சதி!

காவிரிச் சமவெளிப் பகுதி முழுவதிலும் பெட்ரோல் எண்ணெய், எரிவாயு, மீத்தேன் இன்னும் பல இயற்கை வளங்கள் புதைந்து கிடக்கின்றன. பல கோடானகோடி ரூபாய் மதிப்புபெறும் இவற்றை சுரண்டியெடுத்து கொள்ளையடிக்க பன்னாட்டுப் பெரு முதலாளிகளும், உள்நாட்டுப் பெரு முதலாளிகளும் பல ஆண்டுகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், காவிரிச் சமவெளிப் பகுதி உழவர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டங்களின் விளைவாக இந்த முயற்சிகள் வெற்றிபெற வில்லை. காவிரிச் சமவெளிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது என்பது நாடறிந்த ஒன்றாகும்.

இந்தப் பின்னடைவை ஏற்றுக்கொள்ள முடியாத பெரு முதலாளி வர்க்கம் காவிரிப் பிரச்சனையின் பின்புலத்தில் மறைவாகச் செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. தொடக்கத்திலிருந்து காவிரிப் பிரச்சனையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு அந்தத் தீர்ப்பை நிறைவேற்றவும், காவிரிப் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கும் ஒன்றிய அரசு முன்வராததற்கு பெரு முதலாளி வர்க்கத்தின் அழுத்தமே காரணமாக இருக்கவேண்டும்.

மேகதாது அணையைக் கட்டும் பிரச்சனையிலும், ஒன்றிய அரசு எந்த முடிவுக்கும் வராமல் வேடிக்கைப் பார்ப்பதற்கும் அதுவே காரணமாகும். மேகதாது அணை கட்டி முடிக்கப்பட்டுவிடுமேயானால் ஒரு சொட்டு நீர்கூட, தமிழகத்திற்கு வராது. காவிரி சமவெளிப் பகுதி பாலைவனமாகும். வேளாண்மையை கைவிட்டு உழவர்கள் வேறு பிழைப்புத்தேடி வெளியேறவேண்டிய நிலை உருவாகும். உழவர்கள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டுச் செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இந்த நிலை உருவாகிவிட்டால், பின்னர் காவிரி சமவெளியில் புதைந்து கிடக்கும் இயற்கை வளங்கள் அத்தனையும் கொள்ளையடிப்பது எளிதாகும் என பெரு முதலாளி வர்க்கம் வகுத்த வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்றவே காவிரிப் பிரச்சனை தீர்க்கப்படாமல் கிடப்பதற்குக் காரணமாகும்.

தமிழ் மறவர்களின் புகழ் மணக்குமாக!

கருநாடக மண்ணில் உற்பத்தியாகும் காவிரியின் நீர் தங்களுக்கே சொந்தமானதாகும் என கொக்கரித்து இயற்கை நீதியின்படி தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரைத் தராமல் கருநாடகம் வஞ்சிக்கிறது.

இந்த வாதப்படிப் பார்த்தால், நெய்வேலியில் தமிழ் மண்ணில் புதையுண்டுக் கிடக்கும் நிலக்கரியை வெட்டியெடுத்து தமிழ்த் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் தமிழகத்திற்கே சொந்தமானது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 20% கருநாடகத்திற்கும், 20% ஆந்திரத்திற்கும், 20% கேரளத்திற்கும் மற்றும் ஒன்றிய அரசின் மின் தொகுப்பிற்கு 20%மும் போக எஞ்சிய 20%தான் தமிழகத்திற்கு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கருநாடகத்திற்குத் தமிழக மின்சாரத்தை வழங்கக் கூடாது என பல்வேறு கட்சிகளும் போராடின. தமிழக திரையுலகைச் சேர்ந்த நடிகர்களும், பிறரும் போராடினார்கள்.

இந்த கோரிக்கையை முன் வைத்து காவிரி மீட்புப் படையின் தளபதி சுபா. இளவரசன் தலைமையில் தோழர்கள் மணிவண்ணன், பாக்யராசு, அருள், அருச்சுனன் ஆகிய ஐந்து பேரும் பெரும் ஈகத்திற்குத் தயாராகி இரகசியத் திட்டம் ஒன்றை வகுத்தனர். நெய்வேலியிலிருந்து கருநாடகத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல அமைக்கப்பட்டிருக்கும் மின் கோபுரம் ஒன்றைத் தகர்த்துவிட்டால், மின்சாரம் செல்வது தடைப்பட்டுப் போகும்.இந்தத் திட்டத்துடன் திருநாவலூர் அருகே இருந்த மின் கோபுரத்தை வெடி வைத்துத் தகர்த்தனர்.

இதன் விளைவாக ஐந்து பேரும் 2002ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். இரண்டாண்டுகள் நடந்த இந்த வழக்கில் அவர்களுக்கு 2004ஆம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இன்முகத்துடன் அத்தண்டனையை ஏற்றுச் சிறையில் வாடிய போதிலும் அவர்கள் கொஞ்சமும் மனம் தளரவில்லை.

காவிரிப் பிரச்சனைக்காக எத்தனையோ பேர் போராடினாலும், அதற்காக 7 ஆண்டு காலம் சிறையில் கழித்த இவர்களுக்கு ஈடு இணை இல்லை. காவிரிப் பாசன உழவர்கள் தீரமிக்க இந்த இளைஞர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்கள். இவர்களின் ஈகத்தை மதித்துப் போற்றுவது அனைத்துத் தமிழர்களின் கடமையாகும். தமிழன்னைப் பெற்றெடுத்த “வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் பூண்ட இந்தத் தமிழ் மறவர்களின் புகழ் கன்னித் தமிழ்க் காவிரிக் கரையோரம் நெடுகிலும் மணக்குமாக.
நன்றி: தென்செய்தி

The post காவிரி விவகாரத்தில் வஞ்சித்த இந்தியத் தலைவர்கள் -பழ. நெடுமாறன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
5985
சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி: ஓபிஎஸ், ஈபிஎஸ் தவிப்பு https://koodal.com/news/2022/06/13/%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9c%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88/ Mon, 13 Jun 2022 04:40:28 +0000 https://koodal.com/?p=5976 சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி காட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறைவாசத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.…

The post சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி: ஓபிஎஸ், ஈபிஎஸ் தவிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி காட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறைவாசத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது சசிகலா அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்குவதாகவும், அதிமுகவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களே விரும்புவதாகவும் கூறி வருகிறார்.

கூடவே இந்த பயணத்தில், ‘அதிமுக முக்கிய தலைவர்கள் தற்போதும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், ஒரு சிலர் மட்டும் தன்னை எதிர்ப்பதாகவும் கூறி’ சசிகலா வேற லெவலுக்கு, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் அதிமுகவை மீட்டெடுக்கும் வகையில் சசிகலா பல்வேறு அதிரடியான திட்டங்களையும் தீட்டி காய்களை நகர்த்தி வருவதாகவும், சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, சசிகலா கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், ‘அதிமுகவுக்கு நானே நிச்சயம் தலைமை தாங்குவேன். அதற்கான நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது’ என கூறி இருந்தது அதிமுக மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பாஜக முன்னாள் எம்.பியும், நடிகையுமான விஜயசாந்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவை ரகசியமாக சந்தித்து நீண்ட நேரம் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் தி.நகரில் இருக்கும் இல்லத்தில் வெளிப்படையாக சந்தித்து விஜயசாந்தி பேசி இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் ரகசியமாக சந்தித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது சசிகலாவின் எதிர்கால அரசியல் பயணம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டதாகவும் அதிமுகவை கட்டுக்குள் கொண்டு வர எந்த மாதிரியான நடவடிக்கையில் இறங்குவது என, திட்டம் தீட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், அ.தி.மு.கவை பாரதிய ஜனதா கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. அதனாலேயே, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க மற்றும் அமமுகவை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் கை கூடவில்லை.

இந்நிலையில் 2024ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு விஜயசாந்தி சசிகலாவை சந்தித்து பேசியிருப்பதாகவும் இச்சந்திப்பின்போது அதிமுகவுக்கு சசிகலா வருவதற்கு பா.ஜ.க பச்சைக் கொடி காட்டி இருப்பதை கூறி, வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் சசிகலாவை விஜயசாந்தி மட்டும் அல்ல, வேறு எந்த பாஜக நிர்வாகி வந்து சந்தித்து பேசினாலும் நாங்கள் எடுக்கின்ற முடிவு தான் இறுதி முடிவு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூறி வருகின்றனர்.

இப்படி இருவரும் வெளிப்படையாக கூறி விட்டாலும் ‘பில்டிங் ஸ்டார்ங்.. ஆனால் பேஸ்மட்டம் வீக்’ என்பது போன்று, பாஜக மேலிடம் எடுக்கும் முடிவுக்கு எதிர் கருத்து கூற முடியாத சூழல் நிஜத்தில் நிலவுவதால் ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியோர் என்ன செய்வது? என்று புரியாமல், தவியாய்.. தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி: ஓபிஎஸ், ஈபிஎஸ் தவிப்பு appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
5976
இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த் https://koodal.com/news/2022/05/26/sri-lankas-situation-will-come-to-tamil-nadu-too-premalatha-vijayakanth/ Thu, 26 May 2022 12:06:08 +0000 https://koodal.com/?p=4414 செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும் என்று கருத்து தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:- தமிழக…

The post இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும் என்று கருத்து தெரிவித்தார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

தமிழக அரசு ஓராண்டில் நூற்றாண்டு சாதனை என்று கூறிவருகிறது. ஆனால் மக்கள் போற்றும் சாதனை என்று எதுவும் பார்க்கமுடியவில்லை. தமிழகத்தில் மின்வெட்டு தொடர்கிறது. ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ரேசன் அரிசி கடத்தலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதுகிறார். இதன்மூலம் தமிழகத்தின் நிலை என்ன என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ரேசன் கடத்தல் என்பதை ஆளுங்கட்சியினரே செய்கின்றனர்.

தமிழக அரசு மக்களின் அடிப்படை கோரிக்கைகளான தூர்வாருதல், சாலைவசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் பட்டப்பகலிலேயே வெளியே செல்லமுடியவில்லை. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதா என்பதைப் பொதுமக்கள் முடிவெடுக்கட்டும். குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.

தேமுதிகவை பொறுத்தவரையில் தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. தமிழகம் முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றோம். கட்சி தேர்தல், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் செய்யவேண்டிய நலத்திட்டங்கள் அதிகம் உள்ளன. மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும்.

லஞ்சம் ஊழல் ஒழியவில்லை. மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு அரசியல் மட்டுமே செய்கின்றனர். மக்களுக்குத் திட்டங்கள் சேருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும். சசிகலாவின் அறிவிப்பு என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம். அவர் ஆன்மீக பயணமும், அவ்வப்போது அறிவிப்புகளும் செய்து வருகின்றார். முழு அளவில் அவர் அரசியலுக்கு வந்தபிறகு பொறுத்திருந்து பார்ப்போம்.

இலங்கையின் நிலையில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவேண்டும். இது கச்சத்தீவை மீட்கச் சரியான தருணம். இதுபோன்ற செயல்களைச் செய்தால் பாராட்டுவோம். பெட்ரோல் விலை உயர்வில் அண்டை மாநிலங்கள் குறைத்து வருகின்றன. நமது மாநில அமைச்சரும் மத்திய அரசுபோல் குறைத்து மக்களின் சிரமத்தை உணர்ந்து பார்க்கவேண்டும். பெட்ரோல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வளர்ச்சி குறித்து உணர்ந்து பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்.

இலங்கையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அங்கு ஆட்சி மாற்றமும் நடந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் கவனம் இல்லாமை, இலவசத் திட்டங்களை அதிகமாக வழங்கியதுதான் இலங்கையில் இந்த நிலை ஏற்பட முக்கிய காரணம். இதனைத் தமிழக அரசு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில்தான் 37சதவீதம் இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக சர்வே தெரிவிக்கின்றது. ஓட்டுக்காகவும், ஆட்சியைப் பிடிப்பதற்காகவும் வழங்கப்படும் இலவசங்கள் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் இலவசம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், ரேசனில் இலவச பொருள்கள் என்று பலதிட்டங்களை அறிவித்தனர். இதே நிலையைத் தொடர்ந்தால் இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சரிடம் கேட்கக்கூடாது என்றும் டி.ஆர்.பாலுவிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறுவது, மக்களை முட்டாளுக்கும் பேச்சு. மக்கள் தேர்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்துள்ள நிலையில், ஆட்சி எந்தளவுக்கு இருக்கிறது என்பது ஒருபானைக்கு ஒருசோறு என்பது போல் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நீட் விலக்கு சாத்தியமா என்பதை முதலில் தமிழக அரசு உணரவேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றக்கூடாது. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

The post இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
4414
குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் https://koodal.com/news/2022/05/26/monkey-pox-has-not-spread-yet-minister-ma-subramaniam/ Thu, 26 May 2022 12:04:23 +0000 https://koodal.com/?p=4411 தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை, ஜெயராமன் தெரு, மசூதி தெரு, ஆலந்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் கட்டுமான பணியை மருத்துவம்…

The post குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை, ஜெயராமன் தெரு, மசூதி தெரு, ஆலந்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் கட்டுமான பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மக்களை தேடி மருத்துவம் ஒரு மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது. குறுகிய காலத்தில் சுமார் 70 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை முதல்கட்ட தடுப்பூசியை 93.73 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். 2ம் கட்ட தடுப்பூசியை 82.48 சதவீதம் செலுத்தி உள்ளனர். 1 கோடியே 63 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். வரும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது

குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவர்களிடம் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தன. சோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை. ஆகவே, குரங்கு அம்மை குறித்தான அச்சம் தேவையில்லை. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
4411