மதுரை ஆவினில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து திருப்பதி லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியதில் நடைபெற்றுள்ள முறைகேட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி நெய் விநியோகம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணையில், ஆவினில் உள்ள அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் லட்டு தயாரிப்பதற்காக 15 ஆயிரம் கிலோ நெய் அனுப்பியது தொடர்பாக தணிக்கையில் ஆவணம் இல்லாதது குறித்தும், தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக போலியான ஆவணங்கள் மூலமாக நெய் விநியோகம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.