எப்போதும் சோகமாக இருப்பவரா?

நம்மில் பலர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும், சோகமாகவே காட்சி அளிப்பர். அதற்கு அவர்களின் வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்னைகள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. மரபு பண்புகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அறிவியல் செய்திகளை வெளியிடும் பத்திரிகை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

நம்மில் பலர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சிலர் எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். சோகத்தையும் மறைத்து மற்றவர்கள் மத்தியில் புன்னகையோடு இருக்கின்றனர். இதற்கு வாழ்க்கையில் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் மட்டுமே காரணமில்லை. அவர்களின் மரபணுக்களும் (ஜீன்), மரபு சுதியான பண்புகளுமே காரணம். மகிழ்ச்சியான திருமணம், உண்மையான பாசமிக்க நண்பர்கள், போதிய வசதிகளை அனுபவிக்கத் தேவையான பணம், மதத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை போன்றவை மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தாலும், இவற்றை எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மரபு பண்புகளும், மரபணுக்களும் இருக்கும் என நம்பப்படுகின்றன.

அதனால், ஒருவர் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பதற்கு அவர்களின மரபு பண்புகள் மற்றும் மரபணுக்களே முதல் காரணம். அதற்கு அடுத்தபடியாக ஒருவருக்கு திருமணம் மகிழ்ச்சியைத் தரலாம். நல்ல நண்பர்கள் கிடைப்பதன் ஒருவர் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். கோல்கட்டாவில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நகரில் மத்திய தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அளவிற்கு சந்தோஷமாக இருப்பது போல காணப்படுகின்றனர்.

அதனால், ஒருவரின் வாழ்வு மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் மரபுப் பண்புகளே 90 சதவீத இடத்தைப் பிடிக்கின்றன. தனிப்பட்ட நபர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் அவருக்கு மகிழ்ச்சியையோ, விரக்தியையோ தரலாம். இருந்தாலும், ஒரே விதமான வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட அதே நேரத்தில், மாறுபட்ட மரபுப் பண்புகளைக் கொண்ட இருவர் வெவ்வேறான வகையில் தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மின்னிசோடாவில் கடந்த 1936ம் ஆண்டிற்கும், 1955ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இரட்டைக் குழந்தையாகப் பிறந்து தற்போது வாலிபர்களாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், இரட்டையர்களின் மகிழ்ச்சி அளவில் மாறுபாடுகள் உள்ளதாகவும், அவர்களின் மரபுப் பண்புகளிலும் ஏற்ற இறக்கங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. 44 சதவீதம் 5 சதவீதம் வரை வேறுபாடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வருமானம், திருமணம், கல்வி போன்றவைகளால் இரட்டையர்களுக்கு இடையே ஏற்படும் மகிழ்ச்சியின் அளவில் மூன்று சதவீதத்திற்கு மேல் வேறுபாடுகள் இல்லை.