நேர்க்காணலில் கண்ணீர் விட்டு கலங்க வைத்த சமந்தா!

பிரபல நடிகையான சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் யசோதா. வரும் 11ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் தொடர்பான பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, தனது உடல்நிலை குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

நடிகை சமந்த தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வரும் சமந்தா, சிகிச்சையில் இருக்கும் போட்டோவை அண்மையில் வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பேட்டியில் சமந்தா தனது உடல்நிலை குறித்து கண்ணீர் விட்டுள்ளார். அதில் நான் எனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியது போல், சில நாட்கள் நல்ல நாட்களாகவும் சில நாட்கள் கெட்ட நாட்களாகவும் இருக்கிறது. சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட ரொம்ப கடினமாக உணர்ந்தேன்.
ஆனால் நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கே போராட வந்திருக்கிறேன். நான் ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். என்னுடைய உடல் நிலை எனது உயிருக்கு ஆபத்தானது என்று விளக்கும் பல கட்டுரைகளை நான் பார்த்தேன்.

இப்போது என்னுடைய நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல. நான் இன்னும் இறக்கவில்லை. அந்த தலைப்புச் செய்திகள் அவசியமானதா என்று நான் நினைக்கவில்லை. ரொம்ப கடினமான நிலையில்தான் இருக்கிறேன் என உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசியுள்ளார் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்களும் கலங்கி வருகின்றனர்.