விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் ருக்மிணி வசந்த்!

தமிழ் சினிமாவில் கைவசம் டஜன் படங்களை வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் 51 வது படத்தினை ஆறுமுக குமார் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்’ படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராக திகழும் விஜய் சேதுபதி, ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 51 வது படத்தினை ஆறுமுக குமார் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பல படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் அட்லீயின் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானை எதிர்த்து வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் ரிலீசான இப்படம் ரூ. 1000 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது. இதனையடுத்து விஜய் சேதுபதியின் மற்றொரு பாலிவுட் படமாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ உருவாகியுள்ளது. கத்ரீனா கைப்புடன் சேதுபதி இணைந்து நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதனிடையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை பார்ட் 2’ விலும் மும்முரமாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இப்படத்தில் வாத்தியராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் தனது 51 வது படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவரது இயக்கத்தில் ஏற்கனவே ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்’ படத்தில் நடித்திருந்தார். கெளதம் கார்த்திக்கும் இப்படத்தில் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்’ படம் ரசிகர்கள் இடையில் பெரிதான வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவரது இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் ‘ஏழு கடல் தாண்டி’ பட நடிகை ருக்மிணி வசந்த் இருப்பதை போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் பான் இந்திய ரிலீசாக இரண்டு பாகங்களாக வெளியான ‘ஏழு கடல் தாண்டி’ படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் ருக்மிணி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக ருக்மிணி நடித்து வருவது ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படத்தின் ஷுட்டிங் தற்போது மலேசியாவில் நடந்து வருகிறது.