விஜய்யின் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரலில் வெளியாகும்!

வரும் ஏப்ரலில் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தற்போது நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடித்து வரும் சூழலில் அவருக்கு சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடித்து வருகின்றனர். மேலும் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் சூட்டிங்கிற்காக படக்குழுவினர் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்கோ பயணமாக உள்ளனர்.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியான நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்டை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். அவ்வப்போது அவர்களது கேள்விகளுக்கு வெங்கட் பிரபு மழுப்பலான பதில்களை கூறுவதையும் பார்க்க முடிகிறது. இதனிடையே வரும் ஏப்ரலில் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தற்போது நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவடைவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட உள்ளனர். படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் சூழலில் அதற்கான நடவடிக்கைகளில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட உள்ளனர். படம் டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ள சூழலில் அதில் ஒரு கேரக்டர் வில்லன் கேரக்டராக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.