ராஜ்நாத் சிங்குக்கு குதிரை பரிசளித்த மங்கோலிய அதிபா்!

மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கம்பீர குதிரை ஒன்றை அந்நாட்டு அதிபா் பரிசாக அளித்துள்ளாா்.

மங்கோலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை ராஜ்நாத் சிங் கடந்த திங்கள்கிழமை தொடங்கினாா். மங்கோலிய தலைநகா் உலான்பாட்டரில் அந்நாட்டின் அதிபா் யு.குரேல்சுக் உள்ளிட்ட முக்கிய தலைவா்களுடன் செவ்வாய்க்கிழமை அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, வியூக ரீதியிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்புத் தொடா்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மங்கோலியப் பயணத்தின் கடைசி நாளான நேற்று புதன்கிழமையன்று ராஜ்நாத் சிங்குக்கு வெள்ளை நிற குதிரையொன்றை அதிபா் யு.குரேல்சுக் பரிசளித்தாா். இதுகுறித்து ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மங்கோலியாவில் உள்ள நமது சிறப்பான நண்பா்களிடமிருந்து சிறப்பு வாய்ந்த பரிசு கிடைத்திருக்கிறது. அதற்கு தேஜஸ் என பெயா் சூட்டியுள்ளேன். அதிபா் குரேல்சுக் மற்றும் மங்கோலியாவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா். அந்த குதிரையின் படங்களையும் அவா் பகிா்ந்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 2015-இல் மங்கோலியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, அவருக்கும் இதேபோல் குதிரை பரிசளிக்கப்பட்டது. குதிரைகளின் பூமி என்று அறியப்படும் மங்கோலியாவில் சுமாா் 30 லட்சத்துக்கும் அதிகமான குதிரைகள் உள்ளன. கிட்டத்தட்ட மக்கள்தொகைக்கு நிகராக குதிரைகள் எண்ணிக்கை உள்ளது.

உலான்பாட்டா் நகரிலுள்ள காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா். இதுதொடா்பான படத்தையும் அவா் டுவிட்டரில் பகிா்ந்துள்ளாா். அங்குள்ள கண்டன் புத்த மடாலயத்துக்கு சென்று, தலைமை துறவியுடன் கலந்துரையாடியதாகவும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளாா். கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் அந்நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் என்ற பெருமை ராஜ்நாத் சிங்குக்கு கிடைத்துள்ளது.