தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது: எச்.ராஜா

தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது:-

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும் 2000 கோயில்களை புனராவர்த்தனம் செய்வதற்கு பரிசலீப்பதாக கூறி வருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கோயில்களின் எண்ணிக்கையே தமிழக அரசாங்கத்திற்கு தெரியாது. நீதிமன்ற தீர்ப்பில் 44000 கோவில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் 36000 கோவில் இருப்பதாக கூறுயிருக்கிறார்கள். இந்து சமய அறநிலைத்துறை இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலைத்துறை அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் சேகர் பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது. முதல்வரின் மகன் மற்றும் மருமகன் கிறிஸ்தவர்களாக இருப்பதால் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். கோயில்கள் அனைத்தையும் இந்து மக்கள் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொங்கல் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். கபாலீஸ்வரர் கோவிலில் கருணாநிதியை போற்றி என்று எழுதியவர்கள்தான் இந்த திராவிட ஸ்டாக்குகள்.. எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை. இவ்வாறு அவர் கூறினார்.