நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு!

நியூசிலாந்து பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த ஜசிந்தா ஆர்டர்ன் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜசிந்தா ஆர்டெர்ன். தாராளவாத தொழிலாளர் கட்சி ( liberal Labour Party)யை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் அங்கு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை விட பின் தங்கியது. தேர்தலில் ஜசிந்தா ஆர்டெர்னின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள சூழலில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்து இருக்கிறார்.

தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஜசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், “இது கடினமான பணி என்பதால் நான் விலகி செல்லவில்லை. அப்படி இருந்து இருந்தால் வெறும் இரண்டே மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகி சென்று இருப்பேன். நாட்டை வழிநடத்துவதற்கு சிறந்த நபர் இருப்பதை அறிந்ததால் நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என்றார்.

கொரோனா பரவல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை இவர் தலைமையிலான அரசு சமாளித்து வந்தது. மேலும் வெளிநாடுகளுடன் நல்ல உறவை பேணிக்காத்து வந்தார். இந்த ஆண்டு நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் தான் விரைவில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தான் பிரமதர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென அறிவித்துள்ளார்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வந்த இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்பை அவர் லேபர் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார். இந்த கூட்டத்தில் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‛‛இந்த பதவி குறித்து நான் நன்கு அறிவேன். இனி இதை தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என உணர்கிறேன். இதனால் இது தான் பதவி விலகலுக்கான நல்ல நேரம் என நினைக்கிறேன். நான் பதவியில் இருந்து வெளியேறாவிட்டால் அடுத்த தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியாது என நம்புகிறேன். இனி வரும் தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை” என்றார்.