டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

டெல்லியின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நில அதிர்வுகளை உணர்ந்து மக்கள் கட்டடங்களை விட்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் சரியாக பிற்பகல் 2.25 மணி அளவுக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இந்த நடுக்கம் 30 வினாடிகளுக்கு மேல் நீடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. டெல்லியில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.