நரேஷ் குப்தா மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும், முன்னாள் உள்துறை செயலாளருமான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்து இருக்கும் இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-

முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும் காந்தியப் பற்றாளருமான திரு. நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் (ஓய்வு) அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். உள்துறைச் செயலாளர், மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலாளர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் திரு. நரேஷ் குப்தா அவர்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.