குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல: திருமாவளவன்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வேங்கை வயல் பிரச்சனையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். காலம் தாழ்த்தக்கூடாது. அது சமூக நீதி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். பஞ்சமி நிலத்தை கண்டறிவதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் நீதியரசர் மருதமுத்து தலைமையிலான ஆணையத்தை புதுப்பிக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். குறிப்பாக விழுப்புரம் தென்ஆற்காடு மாவட்டங்களில் உள்ள இருளர் மற்றும் குறவர் சமூகத்தினர் மீது திருட்டு வழக்குகள் மற்றும் வழக்குகளை, பொய் வழக்குகளை புனைவது வாடிக்கையாக உள்ளது. எனவே அவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.