டெல்லியில் சீதாராம் யெச்சூரியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார். இதற்காக டெல்லியில் முகாமிட்டிருந்த அவர் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார். பின்னர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பேசிய சீதாராம் யெச்சூரி, ‘எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான முயற்சிகள் வேகம் பிடித்துள்ளன. எதிர்க்கட்சி கூட்டணியில் மாநில அளவில் தொகுதி பங்கீடு நடைபெறும்’ எனக்கூறினார்.