பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை பயணம் ரத்து!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்றும், நாளையும் இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அங்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ராஜ்நாத்சிங்கின் இலங்கை பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை எதிர்நோக்கி இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.