எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் அரசு மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்!

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லக்கடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழுங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.

பிரபல வேளாண் விஞ்ஞானியும், இந்திய ‘பசுமைப் புரட்சி’யின் சிற்பியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக கடந்த வியாழக்கிழமை காலை 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 98.

பசுமை புரட்சியின் தந்தை எனவும் எம்.எஸ். சுவாமிநாதன் அழைக்கப்பட்ட இவர் அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி, நெல் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்தவராவார். ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றார்.

வயது மூப்பு காரணமாக எம்.எஸ். சுவாமிநாதன் உயிரிழந்ததற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதையடுத்து “உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

இந்நிலையில் 30 குண்டுகள் முழுங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று நல்லக்கடக்கம் செய்யப்பட்டது. சென்னை பெசன்ட்நகர் மின்மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் செய்யப்பட்டது.