பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார்.

ஜார்க்கண்ட் குந்தியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அமிஷா உரையாற்றினார். பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் பாகிஸ்தானைப் பற்றிப் பேச வேண்டாம் என்று இந்தியக் கூட்டணி தலைவர் பரூக் அப்துல்லா சில நாள்களுக்கு முன்பு கூறினார். பாகிஸ்தான் இந்தியாவுக்குச் சொந்தமானது, அதை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது.. இதை நான் காங்கிரஸ் மற்றும் இந்தியக் கூட்டணிக்குச் சொல்ல விரும்புகிறேன்.

காங்கிரஸைத் தாக்கி பேசிய அவர், காங்கிரஸுக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதி என்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் இப்போது அனுகுண்டு பற்றிப் பேசி பாகிஸ்தான் மீது கேள்விக்குறியை வைக்கிறார்கள்.

பாஜகவின் நிலைப்பாடு பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது.. அது இந்தியாவுடன் இருக்கும் என்பது தெளிவாக உள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களை வற்புறுத்திய அமித்ஷா, ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி கழுத்துவரை ஊழல் நிறைந்துள்ளது. ஏழை மக்களின் பணத்தை ஜீரணிக்க ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை அனுமதிக்க மாட்டோம்.

ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸூம் “வாக்கு வங்கி அரசியல்” செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் கோயிலைக் கட்டினார். ராகுல் தனது வாக்கு வங்கிக்கு பயந்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் எந்த பழங்குடியினரையும் குடியரசுத் தலைவராக்கியதில்லை ஏன்? என்று ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.