தமிழகம் முழுவதும் 122 நீதிபதிகள் பணியிட மாற்றம்!

தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், மாஜிஸ்திரேட், தீர்ப்பாய உறுப்பினர் என, 122 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற முதலாவது உதவி நீதிபதி மணிமேகலை, சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற 2 வது உதவி நீதிபதியாகவும்; சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற 5 வது உதவி நீதிபதி கயல்விழி, காஞ்சிபுரம் முதன்மை துணை நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

சைதாப்பேட்டை 4 வது பெருநகர மாஜிஸ்திரேட் சுப்ரஜா, செங்கல்பட்டு முதன்மை துணை நீதிபதியாகவும்; சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற 6 வது உதவி நீதிபதி பிரபாகரன், குடியாத்தம் துணை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று எழும்பூர் மோசடி வழக்குகளை விசாரிக்கும் மாஜிஸ்திரேட் நாகராஜன், எழும்பூர் 19 வது மாஜிஸ்திரேட்டாகவும்; ஜார்ஜ் டவுண் 3 வது மாஜிஸ்திரேட் தாவூத் அம்மாள், ஆரணி துணை நீதிபதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகர்கோவில், திருச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் நீதிபதிகள், சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், மாஜிஸ்திரேட்கள், தீர்ப்பாய உறுப்பினர் என மொத்தம் 122 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.