உக்ரைனில் உள்ள நியோ நாஜிக்களை அழிப்பதே நமது நோக்கம்: அதிபர் புடின்

உக்ரைனில் உள்ள நியோ நாஜிக்களை அழிப்பதே நமது நோக்கம். உக்ரைன் போரில் வெற்றி உறுதி என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து தான் ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

ரஷ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த டிசம்பர் 21ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் நாடும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைன் கண்டிப்பாக இணையும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல் உக்ரைனின் முக்கிய நகரமான சோலேடாரை கைப்பற்றியதாக ரஷ்யாவின் கூலிப்படை குழுவான வாக்னர் குழு அறிவித்தது. இந்த நகரத்தை கைப்பற்றினால் டான்பாஸில் மேலும் வெற்றிகளுக்கு வழி வகுக்கும் எனக்கூறப்படுகிறது. ஆனால் வாக்னரின் படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கியமான நுழைவாயில் நகரமான சோலேடரை கைப்பற்றியதாக அறிவித்ததை உக்ரைன் மறுத்துள்ளது. உக்ரேனிய ராணுவத்தின் மூலோபாய தகவல் தொடர்பு பிரிவு தனது அறிக்கையில், “சோலேடார் நகரம் உக்ரேனியனுடையதாக இருந்தது, இருக்கிறது, எப்போது இருக்கும்” என்று கூறியது.

இந்தநிலையில் உக்ரைனின் வெற்றி நிச்சயம் என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய படைகள் உருவான 80வது ஆண்டு விழாவில் பங்கேற்ற அதிபர் புடின் கூறியதாவது:-

உக்ரைன் போரில் வெற்றி நிச்சயம். துளியும் சந்தேகம் வேண்டாம். ரஷ்ய மக்களின் ஒற்றுமை மற்றும் வேண்டியதில் நிலைத்தல் ஆகிய குணாதிசயங்களால் இந்த வெற்றி சாத்தியமாகும். நமது வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள் அதற்கான பலன்களை கொடுக்கும். உக்ரைனில் உள்ள நியோ நாஜிக்களை அழிப்பதே நமது நோக்கம். ஹிட்லரின் நாஜிப்படைகளின் தற்போதைய வடிவம் தான் நியோ நாஜிக்கள். இன வெறியர்களான அவர்கள் நசுக்கப்பட வேண்டும். சர்வாதிகாரி மற்றும் யூத மக்களை கொன்று குவித்து உலகத்தையே ஆட்டிப்படைக்க நினைத்த ஹிட்லரின் நாஜிப்படைகளை நாம் ரஷ்யர்கள் அழித்ததை போல், இந்த நாஜிக்களும் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.