சித்திரை திருவிழா-கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார்

சித்திரை திருவிழாவின் முக்கிய நாளாக கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கள்ளழகர் பச்சை பட்டு டன் ஆற்றில் இறங்குவது மூலம் இயற்கை வளம் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பரவசமடைந்த மக்கள் கோவிந்தா கோஷம் மட்டும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆடிப் பாடியும் தரிசித்தனர்.