கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கூட்ட நெரிசலில் 2 பேர் பலி

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை கண்டு களித்த போது, ஆற்றங்கரையில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் ,ஒரு பெண் ஆகிய இருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். வைகையாற்றில் கள்ளழகர் இறங்கியபோது ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்த நபர்களின் விவரங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.