விஜய் ஓகே சொன்னால் நான் அவர் படத்தை தயாரிக்க ரெடி: உதயநிதி!

எனக்கும் விஜய்யின் படத்தை மீண்டும் தயாரிக்க ஆசையாக தான் இருக்கின்றது. விஜய் ஓகே சொன்னால் நான் அவர் படத்தை தயாரிக்க ரெடியாக இருக்கின்றேன் என்று உதயநிதி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநோயோகஸ்தர், ஹீரோ என பலமுகம் கொண்டு பிசியாக இயங்கி வருகின்றார் உதயநிதி. மேலும் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகின்றார். உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகின்றார். இது தவிர ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் உதயநிதி. மேலும் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான கலகத்தலைவன் திரைப்படம் இந்த வாரம் திரையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார் உதயநிதி. அதில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு வருவதும், அவர் அதற்கு தயங்காமல் பதில் சொல்லி வருவதும் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அந்த வகையில் மீண்டும் விஜய்யின் படத்தை எப்போது தயாரிப்பீர்கள் என உதயநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, எனக்கும் விஜய்யின் படத்தை மீண்டும் தயாரிக்க ஆசையாக தான் இருக்கின்றது. அதற்கு விஜய் மனசு வைக்க வேண்டும். விஜய் ஓகே சொன்னால் நான் அவர் படத்தை தயாரிக்க ரெடியாக இருக்கின்றேன். மேலும் அவரிடம் வாழ்த்து பெற்ற பிறகு தான் நான் அரசியல் பிரச்சாரத்திற்கு சென்றேன். இதைத்தொடர்ந்து நான் வெற்றி பெற்றவுடன் என்னை போனில் அழைத்து வாழ்த்து சொன்னார். நாங்கள் தற்போதும் நட்பில் தான் இருக்கின்றோம் என்றார் உதயநிதி.