‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு குரலில் வெளியானது முதல் பாடல்!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு குரலில் முதல் பாடலாக ‘அப்பத்தா’ பாடல் விடியோ வெளியானது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஏற்கெனவே இந்த படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு விவேக் பாடல் வரி எழுதி உள்ளார். வடிவேலு பாடியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். எங்க அப்பாத்தா என்று தொடங்கும் பாடலுக்கு வடிவேலு அட்டகாசமாக நடனமாடி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலுவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.