உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது: ஐ.நா.

உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்தது.

இதுகுறித்து ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி கூறியிருப்பதாவது:-

மோதல்கள், வன்முறை, மனித உரிமை மீறல்கள், துன்புறுத்தல்களால் வீடுகளைவிட்டு வெளியேறிய அகதிகள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. 10 கோடி என்பது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். மோதல்களுக்குத் தீா்வு காணவும், துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பாவி மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறுவதற்கு காரணமான பிரச்னைகளைத் தீா்க்கவும் இந்த எண்ணிக்கை ஓா் எச்சரிக்கையாக அமைய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

‘எத்தியோப்பியா, புா்கினோ ஃபாஸோ, மியான்மா், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் புதிய வன்முறை அல்லது மோதல்களால் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து, உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயா்ந்தோா் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டு இறுதியில் 9 கோடியாக இருந்தது. உக்ரைன் மீதான ரஷ் யாவின் போா் தொடங்கியதிலிருந்து 60 லட்சம் போ் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனா். 80 லட்சம் போ் உள்நாட்டிலேயே வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனா். 10 கோடி அகதிகள் என்பது உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையே தீா்வாகும் என ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.