ஹிமாசலில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: ஜெ.பி.நட்டா

ஹிமாசல் பிரதேச தேர்தலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஹிமாசல் பிரதேச பேரவைத் தோ்தல் நவம்பா் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 413 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தோ்தல் முடிவுகள் டிச.8-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ் பிரதான போட்டியாளா்களாக உள்ள நிலையில், புது வரவாக ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் ஹிமாசலில் பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா சிம்லாவில் நேற்று வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது:-

தேர்தலில் பாஜக வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் பொது சிவில் சட்டம் அமலாகும். மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு செல்ல மிதிவண்டி வழங்கப்படும். அனைத்து மாவட்டத்திலும் இரண்டு பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும். 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும். பணியின் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. ஆப்பிள் விவசாயிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 12 சதவீதமாக வரையறுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேசியவதாவது:

ஹிம்மாச்சல் பிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். சுகாதார உள்கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப சுகாதாரத்தை மேலும் வலுப்படுத்தப்படும். இதையடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் நடமாடும் கிளினிக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்படும். இதனால் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் பயன் பெற முடியும்.

ஹிம்மாச்சல் மாநிலத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும். பாஜக கணக்கெடுப்பு நடத்தும், வக்பு சொத்துக்கள் சட்டப்படி விசாரிக்கப்படும். இதனால் சட்டவிரோத செயல்கள் தடுக்கப்படும். ஹிம்மாச்சல் பிரதேசத்தில் பா.ஜ., வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும். நிபுணர் குழு அமை க்கப்பட்டு அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சிவில் சட்டம் அமலாகும். பாஜக அரசு ‘சக்தி’ என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இதன் கீழ் 10 ஆண்டுகளில் 12,000 கோடி ரூபாய் செலவழிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.