பாகிஸ்தானில் போலியோ தடுப்புக்குழு மீது தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி!

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழுவின் பாதுகாப்புக்குச் சென்று காவலர்கள் மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்கள், குழுக்களைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவாட்டா நகரில் உள்ள பலேலி பகுதியில் இன்று போலியோ மருந்து முகாம் நடைபெறுகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட 20-க்கும் மேற்பட்ட போலீசார் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது போலீஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உள்பட மூவர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.