விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை அனுப்பியது சீனா!

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை அந்த நாடு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஃபேய் ஜன்லாங், டெங் கிங்மிங், ஷாங் லூ ஆகிய 3 வீரா்களை ஏற்றிக்கொண்டு, ஷென்ஷாவ்-15 விண்கலம் லாங் மாா்ச்-2எஃப் ஒய்15 ராக்கெட் மூலம் அந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் புதிய வீரா்களை ஆய்வு நிலையத்தில் விட்டுவிட்டு, 5 நாள்களுக்குப் பிறகு அங்கு ஏற்கெனவே உள்ள 3 விண்கல வீரா்களை ஏற்றிக்கொண்டு பூமி திரும்பவிருக்கிறது. சீன விண்வெளி ஆய்வு வரலாற்றில் வீரா்கள் மாற்றிக்கொள்ளப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தனக்கென்று சொந்தமாக சீனா அமைத்து வரும் வரும் தியாங்காங் விண்வெளி நிலையம், இந்த ஆண்டு இறுதிக்குள் அது செயல்படத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.