புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்: அன்புமணி

டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி அறிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிஉள்ளதாவது:-

டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.