தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும்: அன்புமணி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மியாட் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வழக்கமான மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.