சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு நிறுத்திவைப்பு!

சேலம் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகத்தில் தொகுதிகளிலும் மார்ச் 20இல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 1,403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலைமுதல் பெறப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு பரிசீலனையின் போது, இரட்டை வாக்காளர் பிரச்னை எழுப்பப்பட்டதால், விளக்கம் கொடுக்கும் வரை பரிசீலனை நிறுத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.