சீனர்களை ரத்தம் சிந்த வைத்தவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்: சீனா

சீனர்களை ரத்தம் சிந்த வைத்தவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்பிக்கும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. தற்கொலையை சேர்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டை உடலில் அணிந்து வந்து வெடிக்க வைத்தது வீடியோவில் தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் சீன குடிமக்களை ரத்தம் செய்த வைத்தவர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என சீன அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் உள்ள சீனர்களுக்கு வழங்கும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். சீனர்கள் சிந்திய ரத்தம் வீணாகக்கூடாது. இந்த சம்பவத்திற்கு பின்னாள் இருக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் உரிய விலையை கொடுத்தாக வேண்டும். இவ்வாறு சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.