அமெரிக்க மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்க மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் படு பிசியான இடம். அங்கு சுரங்கப் பாதையில் இன்று மாலை புகுந்த மர்ம நபர் ஒருவர் பயணிகளை நோக்கி திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த கொடூர தாக்குதல் 5 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நியூயார்க் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமிராவில் போலீசார் ஆராய்ந்ததில், அதில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.