சமூக தொண்டு நிறுவனம் தொடங்கும் ஆத்மிகா!

நடிகை ஆத்மிகா சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளார். சென்னை வடபழனி முருகன் கோயில் அருகே இருந்த ஆதரவற்றோருக்கு நடிகை ஆத்மிகா உணவளித்தார்.

மீசையை முறுக்கு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ஆத்மிகா. அவர் கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஆத்மிகா. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். ரசிகர்களை கவரும் விதத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் ஆத்மிகாவிற்கு ஆன்மிகத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் மிகுந்த இறை நம்பிக்கையும், சமூக சேவை எண்ணமும் உடைய நடிகை ஆத்மிகா சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளார். சினிமா நடிப்பு, தொழில்நுட்ப ஈடுபாடு, மெய்ஞான பேச்சாற்றல் என பன்முக திறமை கொண்ட ஆத்மிகாவிடம் இதைப்பற்றி கேட்டபோது, ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதும், கஷ்டத்தில் வாடும் உயிர்களுக்கு உதவுவதுமே ஆன்மீகத்தின் உச்சம் என்று விளக்கமளித்தார்.

சிறு வயதிலிருந்தே பொதுநல ஈடுபாடு அதிகமுள்ள ஆத்மிகா, விரைவில் சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி, பல நற்காரியங்களில் ஈடுபடப்போவதாக உறுதி அளித்து இருக்கிறார். ஆத்மிகாவின் செயலை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.