தமிழ்த் திரையுலகின் பெரும் அடையாளம் வடிவேலு: மாரி செல்வராஜ் வாழ்த்து!

தமிழ்த்திரையுலகின் பெரும் அடையாளமாக இருக்கும் அன்பு அண்ணன் வைகைபுயல் வடிவேல் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி – 2’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. மேலும், தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை இனி நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார். தனது சம்பளத்தை உயர்த்தியதகவும் தகவல்கள் வெளியானது. மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு தனது வழமையான நகைச்சுவை பாணியை கைவிட்டு புதுமாதிரியாக நடித்திருந்தார். மாமன்னன் படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ்பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் பெரும் அடையாளமாக இருக்கும் அன்பு அண்ணன் வைகைபுயல் வடிவேல் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மாமன்னன்” எனப் பதிவிட்டுள்ளார்.